பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 93 இறுதிவரை போவதே இல்லை. இவை அனைத்தையும் காட்டிலும் நான்காவதாக உள்ள ஆணவம் என்னும் குற்றம் மிக முயன்று போக்கப்பெற்ற பொழுதும் போய்விட்டதுபோலக் காட்சியளித்து பிறகு மற்றோர் இடத்தில் மற்றொரு வடிவில் காட்சியளிக்கக் காண்கின்றோம். உடம்பில் தோன்றியுள்ள நச்சுக் கட்டியை அறுவை மருத்துவத்தின்மூலம் போக்கி, அதில் மகிழ்ச்சியடை கின்ற அதே நேரத்தில் உடம்பின் மற்றொரு பகுதியில் மற்றொரு வடிவில் அக்கட்டி வெளிப்படுமாறு போல, மனிதனிடத்திலுள்ள அகங்காரமும் ஒரு நிலையில் போக்கப்பெற்றால் மற்றொரு நிலையில், மற்றொரு வடிவில் தலைதூக்கி நிற்கக் காண் கின்றோம். - இக் கருத்தை வலியுறுத்த வந்த சைவ சமயத்தினர் இந்த ஆணவமாகிய மலத்தை (குற்றத்தை) ஒருசேர அழித்துவிட முடியாது என்றும், அதனை அடக்கி வைத்திருப்பதே ஒல்லும் என்றும் கூறியுள்ளனர். அம்மட்டோடு இல்லாமல், உயிர்களைச் சகலர்'என்றும் பிரளயாகலர்'என்றும் விஞ்ஞானகலர்'என்றும் மூன்று பகுப்பாகப் பிரித்து, ஆணவம் கன்மம், மாயை' என்ற மூன்று மலங்களையும் உடையவர் சகலர்' என்றும், ஆணவம்,' மாயை' என்ற இரண்டைமட்டும் பெற்றவர் பிரளயாகலர்' என்றும், ஆணவத்தை மட்டும் பெற்றவர் விஞ்ஞானகலர்' என்றும் கூறுவர். இப் பிறவியின் சிறப்பு என்னவென்றால், மானிட உயிர் வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையை அடை கின்றபொழுதுகூட, ஆணவத்திலிருந்து மனிதன் நீங்குமாறு இல்லை. எனவே, அழிக்க முடியாத அந்தக் குற்றத்தை உள்ளவாறு உணர்ந்து ஒரு மனிதன் அதனை அடக்கி ஒடுக்கிக் கொள்ளக் கூடுமேயானால் அவன் முழுத் தன்மை பெற்ற மகாத்மாவாக ஆகிவிடுகின்றான்.