பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பதிகுறு மாதம் ஆகும் போது குழந்தை தளர் நடை பயிலத் தொடங்குகிறது. தடு மாறிக் கொண்டு அது நடந்து வரும் காட்சி வேடிக்கையாக வும் விருந்தாகவும் இருக்கிறது. அங்கும் இங்கும் நடந்து செல்லா மல், தன்னை நோக்கி வருவதை யே பெரிதும் விரும்புகின்ற தாய் 'வா, வா, இங்கே வா’ என்று அழைக்கிருள். 6. பொன்னே வைரப் பூவே வா - கட்டிக் கரும்பே இங்கேவா கணியே தேனே இங்கேவா தட்டித் தடவித் தடுமாறித் தளர்ந்து விழுந்து விட்டாலும் முட்டி மோதிக் கொண்டாலும் முயன்று மேலும் நடைபயிலும் சிட்டுக் குருவி இங்கேவா சின்னப் பூவே இங்கேவா. ஆடி ஆடித் தள்ளாடி -- அடிவைத் தடிவைத் தென்மடியை நாடி நாடி முன்னேறி நடக்கும் மாடப் புருவேவா கூடிக் கூடி இருக்கவே கொஞ்சிக் கொஞ்சிப் பேசவே பாடிப் பாடி இங்கேவா பச்சைக் கிளியே இங்கேவா. தங்கக் கிண்ணச் சோறு நான் தருவேன் கண்ணே இங்கேவா பொங்கிச் சிறுசோ ருக்கவே புதிய சிட்டி தருவேன்வா அங்கும் இங்கும் செல்லாதே அன்பே அழகே இங்கேவா பொங்கும் அன்பில் திளேக்கவே பொன்னே வைரப் பூவேவா. 121