பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் - என்னை இப்படித்தான் எல்லோ ரும் பெயரிட்டு அழைக்கிறர்கள். ...நான் பிறப்பில் மூத்தவன். ஏன்? படைப்பின் தலைமகன் என்று கூடச் சொல்லலாம். சொல்லு கிருர்கள். 'கல் தோன்றி மண் தொன் ருக் க | ல த் .ே த...' என்று தொடங்கும் பழமையான பாட .லிலே கூட என்னத்த்ான் முன் வைத்துப் பெருமைப் படுத்துகிறர் கள். அந்த அளவுக்கு என்மீது .புகழையும், பெருமையையும் ஏற்றி இதோ...நான் இங்கே தேடு வாாற்று ஒரு ஒதுக்குப்புறத்தில் கிடக்கிறேன். என்னைச் சுற்றி அபுல்லும் புதரும் மண்டிக்கிடக் கின்றன. துாரத்து மலேச்சரிவிலிருந்து ஓடி வரும் சிற்றருவி என் உடலேக் கழுவித்துாய்மையாக வைத்திருக் கிறது. காலங்கள் ஒடி மறைகின் _றன; பருவங்கள் மாறுகின்றன; இரவு; பகல்; வெயில்; மழை; .பனி; காற்று; எல்லாவற்றுக்கும் நான் ஈடு கொடுத்துக் கொண் டிருக்கிறேன். இருந்தும் என்னைத் தேடுவாரில்லே. நாடுவாரில்லே. நான் காலங்காலமாக மெளன கமாக அழுது கொண்டிருக்கிறேன். என்னேச் சுற்றிலும் முளேத்துக் கிடக்கும் புல் பூண்டுகளைக்கூட மனிதன்-கால் நடைகளுக்கு -உணவாக்கி அறுத்துக் கொண்டு போய்விடுகிருன். ஆனல் நானே இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே கிடக்கிறேன். விரக்தி ஏற் படும் வேளையில்- என்னை ந ேன ச பி த் து க் கொண்டு, குமுறும் நேரத் தில், குளிர்ந்த காற்றலேகள் என் திரடேறிய மேனியின் மேல் புரண்டுசெல்கின்றன. ஆ! அது எவ்வளவு இதமாக, இன்பமாக இருக்கின்றது தெரி யுமா? என் துன்பதுயரங்களை யெல்லாம் மறந்து அப்படியே அமைதியில் மூழ்கி விடுகிறேன் காலம் சுழல்கிறது. அருவியில் நீர் வற்றி விட்டது. பச்சையும் பசுமையுமாக மிளிர்ந்த .ே ச லே க ளி ல் கூட இலேகள் பழுத்து உதிர ஆரம்பித்து விட் டன. அங்குமிங்கும் அலே மோதிப் பறந்து திரியும் சருகுகளின் சல சலப்பைக் கேட்டுக் கேட்டுச்செவி கள் கசந்து விட்டன. வழக்கமாக என்மீது வந்து அமர்ந்து இளேப்பாற்றிக் கொள் ளும் அந்தப் பறவைகூட இப் பொழுது வருவதில்லை. எத்தனே காலங்களுக்குத் தான் நான் இப்படியே வாழ்வது? எனக்கு விமோசனமே கிடை யாதா? ஐயோ, யாராவது என் னேப் பயன் படுத்திக் கொள்ளுங் களேன்-என்வாழ்வு முழுவதும் இப்படியே கழிந்து விடத்தான் போகிறதா? யுகம் யுகமாக என் இதயத்துக்குள் அடக்கி வைத் திருக்கும் ஆசைகளே நிறைவேற் றிக் கொள்ள வழியே இல்லையா? ஒரு நாள் யாரோ சிலருடைய காலடி யோசைகளைக் கேட்டு அதிர்ந்து போனேன். மிகமிக அருகில் வந் தார்கள்; தொட்டுத் தடவித் தட் டிப்பார்த்தார்கள். 44