பக்கம்:இளந்தமிழா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி வாய்த்த மனம் குறுகியதோ? வானுயர விரிந்திடுமோர் வல்லமையும் இதற்கிலேயோ? மற்றவுயிரன்றி மனிதனுக்குள் ளேதானும் மக்கள் மனைஉற வென்றும் மாவட்டம் நாடென்றும் கற்பனையில் எல்லைகட்டிக் காசினியைப் பிரித்த ழிக்கும் இச்சிறுமை தாண்டிடவும் இம்மனத்தால் ஆகாதோ? எல்லையுற்ற குட்டையிதோ? எழுந்து பொங்கி எங்கணுமே அன்புவெள்ள மாய்ப் பெருகும் ஆற்றலிலாச் சிறுமையிதோ? அனைத்துயிரும் உயிரில்லா அனைத்துமே ஒன்றென்னும் பரந்துணரும் அன்புடனே பரிணமிக்கும் வன்மையிந்த மனத்திற்கே இல்லையெனில் மனிதனிதைத் தன்னறிவால் மாற்றிடவும் ஆகாதோ? மரணந்தான் இதன் முடிவோ? மானிடனே, இல்லை இல்லை, இக்கருத்தை நான் ஏற்கேன்; புத்தனென்றும் இயேசு வென்றும் புனிதமுனி காந்தி யென்றும் வாடுமிளம் பயிர்கண்டு வாடுமருள் வள்ளலென்றும் 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/104&oldid=1361113" இலிருந்து மீள்விக்கப்பட்டது