பக்கம்:இளந்தமிழா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அவலம் அவலமெனும் பேயரக்கன் அன்ருெருநாள் வந்தான்

 அவனுருவம் கண்டவர்கள் அஞ்சுதலும் வியப்போ? 

குழிந்த கன்னம் குழிந்த விழி கூரீட்டி போலே, இழிந்து பல திசைகளிலும் ஏகும்முடி தாடியுடன் வானகத்தே ஓங்கிவளர் மரக்கூட்டம் சூழ்ந்த கானகத்துக் குகைதோன்றும் கரடியென நின்ருன். மேணியெல்லாம் அவன் தரித்த விருதுகள்தாம் என்னே! மேனியிலான் வாளியினல் வீழ்ந்த பல உள்ளம், காடுசென்று தவங் கிடந்து கதிகாணுன் கலக்கம், கோடிபல சேர்ந்த பின்னும் குறையாத பேராசை- . இப்படியாய் எண்ணிலவாம்: இவையெல்லாம் என்றன் செப்பறிய திறல் காட்டும் சில பதக்கம் என்ருன் : "செத்தவரை எண்ணியழும் கண்ணிரில் தினமும் மெத்த மகிழ்ந் தாடிடுவேன்; நத்தியவர் உயிரைத் தின்றிடுவேன்; உன்னையும் நான் சேர்ந்திருக்க வந்தேன்' என்று சொல்லித் தான் நகைத்தான், இடி முழக்கம் கேட்டேன்; 'என்னிடத்தே வந்தனையோ? இருப்பாய் நீ நன்றே; பரிகாசம் பகடி செய்து நகையாட எனக்கே அருகேயார் அசடுவழி ஆளொருவன் உனைப்போல் வாய்க்காதுவா'வென்றேன்: வந்தவழி பார்த்துப் பாய்ந்தானே பறந்தானே பதில் சொல்லக் காணேனே.

           106
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/108&oldid=1360518" இலிருந்து மீள்விக்கப்பட்டது