பக்கம்:இளந்தமிழா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தியாகம் அம்மொழி கேட்டவுடன்-முகம் அன்றலர் தாமரையாய்ச் செம்மொழி கூறுகின்ருள்-இன்பத் தேனமுதான மங்கை.

"குடிகள் துயர்களைதல்-உயர் கொற்றவன் தன் கடனம், கடிமணம் செய்தவர்க் காய்-வாழ்தல் கன்னியர் தங் கடனும்,

ஆதலின் என் பதியே-என்னை அர்ப்பணம் செய்திடுவீர். காதற் கணவனுக்கும்-மக்கள் கண்ணிர் துடைப்பதற்கும்.

சாகக் கொடுத்து வைத்தேன்-இதிற் சாலச் சிறந்த தில்லை; தேக மெடுத்த பயன்-இன்று தெய்வங் கொடுத்த தென்ருள்.

மன்னன் மனங் குழம்ப-மறுநாள் மக்கள் உளந் துடிக்க மின்னெனக் கேணியுளே-நங்கை வேகமாய்ச் சென்றடைந்தாள்.

ஆழக் கிணற்றினுள்ளே-மறைந்த அன்புருக் காணுமலே தாழுங் குரலினிலே-மன்னன் தயங்கியே கேட்டிடு வான்:

           110
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/112&oldid=1360576" இலிருந்து மீள்விக்கப்பட்டது