பக்கம்:இளந்தமிழா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வீரன் குமரன் காந்தியடிகள் தோற்றுவித்த சாத்விகப்போர் எத்தனையோ பேரை வீ ரர் க ள கடவு ம் தியாகிகளாகவும் செய்தது. அப்போரில் பங்குகொண்டு உயிர்த்தி யாகம் செய்தவர்களில் திருப்பூர்க் குமரனும் ஒருவர். அந்தத் தியாக வரலாறு இங்கு கூறப்படுகிறது.

'அன்பின் வடிவமாம் அன்னையே-உன்றன் அடிமலர் வாழ்த்தி வணங்குவேன்; இன்பமு டன்விடை நல்குவாய்-நானும் என்பணி நாட்டினுக் காற்றுவேன்”

என்று குமரன் பணிந்திடத்-தாயும் இளநகை செய்துரை யாடுவாள்; 'நன்றுகு நித்தனை மைந்தநீ-வளம் நாடும் திருப்பூரின் செல்வமே.

சாத்விகப் போரெனில் நெஞ்சுரம்-என்றும் சாலவும் வேண்டும்நீ கொண்டுளாய்: ஆத்மிக சக்தியும் அன்பறம்-வெல்ல ஆருயிர் ஈந்தும் கடன்செய்வாய்;

தேடற் கரிய மகாத்மாவை-இந்தத் தேசத் தலைவராய்ப் பெற்றுளோம்: பாடற் கரிய தமிழ்மகன்-புகழ் பாரெங்கும் வீசிடச் செல்லுவாய்."

           113
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/114&oldid=1360615" இலிருந்து மீள்விக்கப்பட்டது