இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடன யோகம்
நாட்டியம் ஆடுதல் என்தொழில்-எனில்
நல்லறம் கைவிடல் வேணுமோ?
காட்டுவேன் என்கலை யாவையும்-நிலை
நாட்டுவேன் என் மனத்திண்மையும். 4
என்று மொழிந்தனள் ஸ்ரீமதி-அன்னை
இன்மலர்ப் பாதம்கண் ஒற்றினள் -
என்றும் அறியாத விந்தையாய்யாரும்
ஏங்கி வியந்திடும் வண்ணமாய் 5
ஒப்பனை செய்துகொண் டேஅவள்-மன்றில்
உள்ளவர் நோக்கி மயங்கிட
தப்பிய புன்மதி கொண்டவன்-அசாத
சத்துரு காணவே வந்தனள். 6
ஐயன் சிலையங்கு தரையிலே மன்னன்
அரியணை மேலுயர் பீடத்தில்;
பொய்மனம் கொண்ட களிப்புடன்-அவன்
புன்னகை செயதங் கமர்ந்தனன் 7
ஆடினள் நாட்டியம் அன்றுதான்-யாரும்
ஆஹாவெனச் சிலை ஆகவே
ஆடினள் ஆடினள் யோகமாம்-சாந்தி
ஐம்பொறி தன்னிலும் பொங்கவே 8
காணரும் காட்சியைக் கண்டனர்-மங்கை
காற்சிலம்பைத் தெறித் தாடினாள்
பூணும் நகைத் திறள் ஒவ்வொன்றாய்-அவள்
போக்கியே மன்னன் முன்வீசினாள்
9
126