பக்கம்:இளந்தமிழா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடன யோகம்

நடனக் கலைவழு வாமலே-மெல்ல
    நல்லணி யாவையும் சிந்தினாள்
முடிவின் பொருள் உணராமலே-மன்னன்

    மூடக் கரந்தட்டி வாழ்த்தினான்!
10

ஐயன்சிலை முன்பு நின்றனள்-கணம்
    அஞ்சலி ஹஸ்தம் குவித்தனள்
செய்த பெய்க்கோலம் பொறுக்கவே-கண்ணில்

    சிந்தும்முத் தாரமும் சூட்டினாள்
11

சரிகைப்பட் டாடை சரிந்தது-உள்ளே
    தவத்தின் மெய்க்கோலம் தெரிந்தது
வெறுவிக் கடித்துச் சினந்தனன்-சிரம்

    வெட்டித் துணிக்கப் பணித்தனன்
12

உள்ளொளி தன்னிற் கலந்தனள்-உடல்
    உற்றிடும் துன்பம்வென் றாடினாள்
துள்ளி எழுந்தநற் சோதியில்-அவள்
    தோய்ந்தனள் நித்தியம் எய்தியே.

13

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/127&oldid=1359903" இலிருந்து மீள்விக்கப்பட்டது