பக்கம்:இளந்தமிழா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கு ர ல்


எங்கிருந்தோ குரல்கேட்கும்
யார்குரலோ நானறியேன்
மங்கியொளி குன்றியிருள்
வளருமென்றன் கதவிடித்து

எங்கிருந்தோ குரல்கேட்கும்
யார்குரலோ நானறியேன்


பொங்கிளமைப் போதையிலே
புகுந்தங்கே பலசெய்வேன்
தங்குமிடம் தலை மறைவாய்ச்
சதுராக நடந்திடினும்

எங்கிருந்தோ குரல்கேட்கும்
இடித்திடித்து நெஞ்சுலுக்கும்

பங்கமிலா வாழ்வின்பம்
பதிந்ததிலே மெய்மறப்பேன்
தங்கமிவன் எனச்சாற்றி
தரணியோர் புகழ்ந்திடினும்

எங்கிருந்தோ குரல்கேட்கும்
இதுதானோ வாழ்வென்னும்}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/128&oldid=1460173" இலிருந்து மீள்விக்கப்பட்டது