பக்கம்:இளந்தமிழா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தெரு

ஒருசிலநாள் நம்பிக்கை
உளத்தோங்கத் திரும்பிடுங்கால்
அருநட்புத் தெருவெனவே
அணைத்துமுத்த மிடவிழைவேன்
-தெருவேநான்.

மற்றதுயர் நாட்களிலே
மனஞ்சோர்ந்து திரும்பியுனைப்
பற்றறவே துாவென்பேன்
பண்பிழந்தே சீறிடுவேன் -தெருவேநான்.

சிரித்தமுகம் காட்டிவிடில்
தீப்பிழம்பாய் உனையடுத்தேன்
நெரித்தகொடும் புருவமெனில்
நீர்ஓடை யாய்ப்பாய்ந்தேன் -தெருவேநான்...

கொள்ளையின்பம் நீயறிவாய்
கொடுந்துயரும் நீயறிவாய்
உள்ளமறிந் துமையைப்போல்
உதவினைநீ வாழ்த்தறியேன் -தெருவேநான்...

உன்வடிவம் மேடுபள்ளம்
உன்மணமெல் லாமறிவேன்
என்னுடன் நீ இணைந்ததுபோல்
யாரிணைந்தார்? என்றாலும் -தெருவேநான்...

எங்கிருந்தோ வந்தஎனை
என்னவனென் றினிதேற்றாய்
பங்குகொண்டாய் கனவெல்லாம்
பதைக்கின்றேன் உனைப்பிரிய
-தெருவே நான்.

129
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/131&oldid=1460176" இலிருந்து மீள்விக்கப்பட்டது