இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாணல்
மக்களின் துயரமதை-அனல்
வண்ணத்தில் பாடியே சாடிடுவேன்
தக்கவன் யாரெனினும்-அவன்
தாழ்நிலை கண்டுளம் இரங்கிடுவேன்
சிக்கலும் சூழ்ச்சிகளும்-பகைச்
சிறுமையும் சூதுபொய்ப் பிரிவுகளும்
இக்கணமே ஒழிய-நான்
இசைத்திடுவேன் சுவைதெறித்திடுவேன்.
136