பக்கம்:இளந்தமிழா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்தமிழா

வாழ்க்கையிலே சமத்துவமும்,

  மனத்தினிலே உயர்நோக்கும், மாட்சிமிகும் அறநெறியும்
 ஆட்சிசெயப் போரிடுவாய்.

அனைவருக்கும் பொதுஉரிமை:

   அனைவருக்கும் பொதுநீதி: அனைவருக்கும் பொதுஉடைமை
   ஆக்கிடவே தோள் புடைப்பாய்.

மக்களெலாம் ஒர்குலாம்:

  மாநிலமே ஒருவீடாம்

தக்கநெறி இதுகண்ட

   தமிழன் நீ மறவாதே.

இளந்தமிழா எழுந்திரடா!

  இன்பமெலாம் கொணர்ந்திடுவாய் வளம்பெருக்கி வையகத்தை
    வானாடாய்ச் செய்திடுவாய்.
  குறிஞ்சி மணம் - மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகக் கூறப்படும் காதல் மணம்.
  பாரிகொடை - பாரி என்னும் வள்ளலின் கொடைத் திறமை புகழ்பெற்றது.
  மக்களெலாம் ஒர் குலமாம் மாநிலமே ஒரு வீடாம் . யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/20&oldid=1358991" இலிருந்து மீள்விக்கப்பட்டது