பக்கம்:இளந்தமிழா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் குஞ்சு தன்னைப்போற் சிறப்பில்லாத் தன்மையரை நேசித்து மன்னுந்திறம்படைத்த மாண்புடையார் மேலெரிச்சல் கொள்ளும் உலகத்துக் கூட்டத்தில் காகமொன்றே? உள்ளம் புழுங்கியவர் ஓங்குதிறன் தான் நசுக்கும் சின்னத் தனமெல்லாம் தெரிகின்ற திங்கேயும். வன்னப் பறவைகளின் வாழ்க்கையிலும் இதுதானோ? என்றே உலகத்தில் எல்லாகும் ஒரு மனதாய் நன்றான திறமைதனை நனியோங்கப் போற்றிடுவார்? கைவளரா பறவைக்கு இறக்கைகளே கைகள். விண் பாட்டின் மெல்லரும்பு - விண்ணிலிருந்து வரும் கந்தருவ கானத்தின் மெல்லிய அரும்புபோன்றது அந்தக்குயிற் குஞ்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/32&oldid=1358771" இலிருந்து மீள்விக்கப்பட்டது