பக்கம்:இளந்தமிழா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரி (இளமைப் பருவத்திலே காவிரிக் கரையிலே நான் கழித்த நாட்கள் எத்தனையோ! தனித்தும் தோழர்களுடனும் சென்று ஏதேதோ இன்ப எண்ணக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருப்பது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. பிற்காலத்தில் வேறிடங்களிலே வாழ நேர்ந்ததால் இந்த வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் காவிரியருகில் தனியாக உலாவ நேர்ந்தபோது எழுந்த எண்ணங்கள் இக் கவிதையில் உருவாகி யுள்ளன.) இளமைக் கனவுத்தேன் என்னுளத்தே பாய்ச்சிவிட்ட வளமை சுரந்துவரும் வளர்வனப்புக் காவிரியே! வெள்ளை மணற் பரப்பினிலும் விரியு மலர் மருங்கினிலும் துள்ளு புனற் பாட்டினிலும் தோழருடன் நான்கழித்த கனலெழுப்பும் சீரிளமைக் காலத்தை எண்ணி எண்ணி மனங் குழைந்து நிற்கின்றேன் மறதியென்றும் கொண்டதில்லை. 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/36&oldid=1358795" இலிருந்து மீள்விக்கப்பட்டது