பக்கம்:இளந்தமிழா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணீா்

மோதிமிதித் தழித்திடுவேன்
முத்துதிரத் தான் பொறுக்கேன்
என்றுபல வீறுரைக்க
இளைஞா்களைத் துாண்டிடுவாய்
உன்றளரும்பெருமையெலாம்
ஓதிடவே சொல்லுண்டோ?
வீரனிரு விழிகளிலே
வெட்கமிலாத் தோழமை நீ
உறுதியெலாங் யுகித்திடுவாா்
உண்மையெலாங் உரைத்திடுவாய் நீ
உள்ளத் துயரமெலாம்
ஒருசோ்த்துத் தான் கரைத்து
மெல்ல வெளியேற்றும்
வித்தையறி பனிச் சொட்டே..!
துன்பத்தின் கேணியிலும்
சுரந்திடுவாய்; அன்றிமிகும்
இன்பத்தின் உச்சியிலும்
எங்கிருந்தோ தோன்றிடுவாய்!
மாயவித்தைக் கண்மணியே!
வற்றியறி யவைத்தே
பாயுமருட் கருணையெனும்
பயிா்வளா்ப்பாய் வாழிய நீ!

38

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/40&oldid=1460149" இலிருந்து மீள்விக்கப்பட்டது