பக்கம்:இளந்தமிழா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதுவா வெகு தொலைவு

 

மண்டியவுன் வலிப்பெருக்கால்
வகுத்தவின்ப நாடெதுவோ?"
"அதுவா இதுவரையும்
ஆராய்ச்சிக்கெட்டவில்லை."

"வண்ணம் பலகுழைத்து
மனக்கனலைத் தீட்டியதில்
பண்ணும் பரதமுமாய்ப்
பழந்தொழில் அமையட்டும்
எண்ணாிய ஓவியனே
எவ்வுலகம் நாடுகின்றாய்?"
"அதுவா வெகுதூரம்
இதுவரையும் காணேன் நான்."

"இன்பக் கனவையெல்லாம்
எழுத்தால் வடித்தெடுத்துத்
துன்பமெனும் சொல்லொழியத்
துணிந்து பெருங்கவிபுனையும்
அன்பனே நீநோக்கும்
அவ்வுலகம் எதுசொல்வாய்?"
"அதுவா வெகுதூரம்
ஆர்வமுடன் தேடுகின்றேன்."

"வானவர்கள் தாமறியா
வாழ்வதனை எட்டிவிட
ஊனுடலை மிகவாட்டி
ஓங்குதவம் தான்புாிந்து

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/47&oldid=1397614" இலிருந்து மீள்விக்கப்பட்டது