பக்கம்:இளந்தமிழா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிக்கனல்


கானப் பைம்மரப் பேச்சினில்-இளங்
கன்னிப் பேரெழில் வீச்சினில்
மோனப் பேரொலி தன்னிலே-நன்கு
மூட்டுவேன் கவிக் கனலையே.

வானப்பூக்கள் - வானிலே மின்னுகின்ற மீன்கள்.

சீறு நாகத் திரையினில் - நாகப்பாம்பு சீறிப் படமெடுத்து எழுகின்றதுபோல ஒலித்துச் சுருண்டு எழுகின்ற அலையில்.

மோனப் பேரொலி - பேச்சும் ஒலியும் சாதிக்க முடியாததைப் பல வேளைகளில் மெளனம் சாதித்துவிடும். ஆகவே அந்த மோனத்தின் குரல் பேரொலியைவிடச் சிறந்ததாகும்.




50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/52&oldid=1460157" இலிருந்து மீள்விக்கப்பட்டது