இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சத்தியம்
இத்தரணி யென்னாளும்
ஈடேறி உய்யாதோ?
சத்தியந்தான் வெல்லாதோ
தருமநெறி ஓங்காதோ?
என்று மனம் சோர்ந்தேன்
இருள்கூடி நெஞ்சுடைந்தேன்
அந்தப் பொழுதினிலே
அகக் கண்ணின் முன்பாக உன்னதமாம் குறிக்கோளுக் குயிரீந்த மேலோரின்
மன்னுபுகழ் வடிவெல்லாம்
வந்தனவே ஒளிமயமாய்; எல்லார்க்கும் நடுநிலையாய் இயேசுமுனி அன்புருவம்
கல்லும் கரைந்துருகும்
கருணை ஒளி கண்குளிர்ந்தேன்;
அன்பென்று பேசி வந்த
அவர் நெஞ்சில் ஆணியிட்டுத் துன்மதியோர் உடல்வதைத்தார் தூயமகான் மறைந்தாரோ
ஏசுமுனி மாய்ந்தாரோ
இல்லை யில்லை நாமறிவோம் வீசுபுகழ் பொங்கியெழ மேதினியில் ஓங்கிநின்றார் புத்தனுக்குத் தம்பியவர் பொன்னடியைப் பின்பற்றி
மெத்தக் கருணையினால்
மீண்டும் வந்த தம்பியிவர் 61