பக்கம்:இளந்தமிழா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



யாரது?


யாரோ என் கதவைத் தட்டுகிறார்கள்.
யாரது?
யார் என்று கேட்டால் பதில் வருவதில்லை.
நானே கதவைத் திறந்து பார்ப்பதுமில்லை---
உண்டும்
குடித்தும்
ஆடியும்
பொழுதைக் கழிக்கிறேன்!
கதவை யாரோ இடையிடையே தட்டும் ஒலி
மட்டும் ஒய்வதில்லை
திடுக்கிட்டு ஒரு வினாடி நின்று பார்க்கிறேன்.
உள்ளத்திலே ஓர் ஒளி மின்னுகிறது.
யாரது என்று கேட்கிறேன்.
பதில் வருவதில்லை.
நானும் கதவைத் திறப்பதில்லை.
மறுபடியும் எனது கேளிக்கைகளில் முழுகிவிடுகிறேன்.

இடையிடையே யாரோ பொறுமையாய்க் கதவைத்
தட்டுகிறார்கள்.

ஆனால் என் களியாட்டங்களை விட்டுப் போய்க் கதவை
திறந்து பார்க்க எனக்கு விருப்பமோ எண்ணமோ
இல்லை.


94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/96&oldid=1460168" இலிருந்து மீள்விக்கப்பட்டது