இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழைப்பு இளைஞனே எழுந்து நில் தளையெலாம் இன்றே தகர்த்திடு; அரியவும் பெரியவும் புரியவந் தவன் நீ இளைஞனே எழுந்து நில். அன்னையும் அழைத்தனள் இன்னுமா உறக்கம் எழுந்து நில்: இன்ப மனைத்தும் கொணர்ந்திடத் துணிந்திடு: இளைஞனே எழுந்து நில். சோம்பலும் சோர்வும் போம்படி தோளினைப் புடைத்திடு: வானையும் பிளந்திடும் வன்மைகொண் டவன் நீ இளைஞனே எழுந்து நில். சண்டமா ருதம்போல் எண்டிசை தன்னிலும் ஏகிடு புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுப் பொறிகளும் புதுமையிற் புதுமை செய். பழமையின் உயர்வையும் அழகையும் நன்றாய் அறிந்திடு; உன்னரும் மறைகள் உயர்கலை உடையாய் இளைஞனே எழுந்து நில்.
97
இ-7