பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 33 நான் கொடுக்கத் தயாராக இல்லை. எதற்கும் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா ? மாலதி : சரி, கொடு இங்கே. ராகவன் : இதோ......... (ராகவன் தோல் பையைக் கொடுக்கிருன். மாலதி அதை வாங்கிக்கொள்கிருள்.1 காட்சி மூன்று (சோமசுந்தரத்தின் பங்களாவில் ஒரு விசாலமான அறை. நாகரிகமாக அணி செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திலே டெலிபோன் இருக்கிறது. சோமுவும், வாசுவும் அருகில் அமர்ந்திருக் கிரு.ர்கள்.1 சோமு : வாசு, ராகவன் முதலில் உன்னை ஏமாற்றப் பார்த்தான். எதிர்பாராத விதமாக அது தப்பிப் போய்விட்டது. இப்பொழுது அவன் மாலதியை ஏமாற்றிவிட்டான். வாசு ; அதே கொலைக் குற்றத்தைச் சாட்டி அவளேயும் பயமுறுத்தியிருக்கிருன். சோமு : உன்னுடைய கடிதத்தையும், கைத் துப்பாக்கி யையும் எப்படியாவது வாங்கிக்கொள்ள வேண்டு. மென்று மாலதி எண்ணியிருக்கிருள். அவள் பணத்தைப் பெரிதாக மதிக்கவில்லை. வாசு : நாம் அவளேத் தனியாக விட்டுவிட்டு வந் திருக்கவே கூடாது.