பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்தல் விந்தை 99 என்றெல்லாம் அந்தக் காலத்தில் கூப்பாடு கிடையாது. ஒவ்வொரு தொகு தி க்கு இருவர் மூவர் நிற்பார்கள். சாமர்த்தியமுள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள். இரவுக் காலங்களில் உதைகள் பரிமாறிக்கொள்வதும் உண்டு. மிகச் சிறிய வயதிலேயே எங்களுர்க் கோயில் தேர்வில் இக்காட்சி களையெல்லாம் கண்ட எனக்கு இதிலெல்லாம் புதுமை ஒன்றும் தெரியவில்லை. . வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வீரராகவாச்சாரியார் என்பவர் பள்ளி யின் தலைமை ஆசிரியர். அவர்கள் வீட்டுப் பிள்ளையைப் போல் நான் அவர்களிடம் பழகினேன். தலைமை ஆசிரியரின் மனைவியார் குளிக்கப் போகுமுன் என்ன அழைத்துத் தலை வாரிப் பின்னுவார்கள். இரவு பகலெல்லாம் அவர்கள் வீட்டில் குழந்தையாக உண்டு வளர்ந்தேன். அந்த அம்மையாரின் பரிவு என்றென்றும் என் உள்ளம்விட்டு நீங்காது. என் வீட்டில் என் தாயார் பள்ளிக்குச் செல்லு முன் எனது நீண்ட மயிரை வாரிப் பின்னல் இட்டே அனுப்புவது வழக்கம். சில பிள்ளைகள் அந்த நீண்ட பின்னலை ஒட்டி என்னை வால் என்றேகூட அழைப்பார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. என் தாயார் வாரிவிட்ட பின்னலுடன் பல நாள் பள்ளி வந்திருப் பதை அந்த அம்மையார் கண்டிருந்தார்கள். அவர்கள் 'அந்தணராக இருந்தமையால் குளிக்கப் போகுமுன் என்னை அழைத்து உட்காரவைத்து 'வா உங்கள் வீட்டில் அம்மா பின்னுவார்களல்லவா! அதையே நானும் செய்கிறேன். அம்மர் இல்லையே என்ற குறை வேண்டாம் என்று கூறி அருகே அழைத்து அழகாகப் பின்னுவார்கள். அத்தலைமை யாசிரியரும் என்னிடம் அன்பாகவே இருப்பார். அவர் நாள்தோறும் நான் படிப்பதில் அக்கறை காட்டுவார்.