பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சென்னையில் நாடகம் நான் வாலாஜாபாத்தில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் மகாசபை நடந்தது. 1927 டிசம்பர் என நின்ைக்கிறேன். அதற்குச் சென்று அந்தப் பந்தலில் ஒரு நாடகம் நடிக்கவேண்டும் என்று ஏற்பாடாயிற்று. நானும் மகிழ்ந்தேன். கங்கிரசைப்பற்றி எல்லாம் அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. எனினும் நண்பர்களுடன் கூட்டமாகச் செல்லப் போகும் எண்ணம் சிந்தைக்கு இனிமை தந்தது. ஏற்பாடுகள் செய்து புறப்பட்டோம். நான் அதற்குமுன் இரண்டொரு தடவை சென்னைக்குச் சென்றிருக்கிறேன். என்ருலும் அப்போதெல்லாம் என் தாயாருடன் அடக்க ஒடுக்கமாகவே சென்று வந்திருக் கிறேன். ஆகவே இப்போது மற்றைய மாணவர்களுடன் புறப்பட்டுச் சென்றது ஒரு தனி மகிழ்ச்சிதானே யாகும். வலாஜாபாத் புகைவண்டி நிலையத்தில் இருந்து சென்னை செல்ல மூன்று மணி நேரங்கள் சென்றன. காங்கிரஸ் மாந்ாட்டைக் குறித்துப் பல தனி வண்டிகள்கூட இருத்தன வென்று நினைக்கிறேன். எழும் பூர் ஏரிதான் அன்று காங்கிரஸ் நடந்த இடம். இன்று அங்கே ஏரி எண்ணும்படி ஒன்றும் இல்லை. சென்னை நகரமே பல ஏரிகள் சேர்ந்தது தான் போலும். இன்றும் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் முதலியன ஏரியில் இருப்பதைக் காணலாம். எழும்பூர் ஏரியும் அப்போது பரந்த நிலப்பரப்பை உடையதாக இருந்தது. இன்று அங்கே எத்தனையோ பெரு மாளிகை களும், சிறு வீடுகளும், குடிசைகளும் உண்டாயிருக்கின்றன.