பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் நாடகம் 109 அன்று மாலை ஐந்து மணிக்குமேல் நான் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கம்பாக்கம் விட்டுக்குச் சென் றேன்.அன்னையிடம் நான் பரிசுபெற்ற நூல்களைக் கொடுத் தேன். அவர்கள் அப்படியே என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள். மறுநாள் ஒர் ஆசிரியர் வந்து நான் நடித்த சிறப்பையும் சென்னையில் பிறர் புகழ்ந்த சிறப்பையும் கூறும்போது அவர்கள் மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனச் சான்றேன் எனக் கேட்ட தாய்' என்ற குறளுக்கு இலக்கியமாக இருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்தேன். இவ்வாறு அங்கு இந்து மத பாடசாலையில் கற்ற காலத் தில் பலவாறு நல்ல முறையில் பேசவும் நடிக்கவும் பயிற்றப் பெற்றேன். ஒரு காலத்தில் நான் பேசும் போது தலைமை வகித்த டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்கள் என் பேச் சின் திறம் கண்டு தான் அணிந்திருந்த மாலையை எனக்குச் சூட்டிப் புகழ்ந்தார்கள். நான் அங்கு பயின்ற காலத்தில் பெற்ற அனுபவமே பிற்காலத்தில் மேடைகளில் பேசும் வழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது என்னலாம். இன்றும் அப்பள்ளியை மறவாமல் அடிக்கடி சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மகிழ்கிறேன்.