பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இளமையின் நினைவுகள் பட்டு ஒன்றிக் கலந்தே வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் பிணக்கும், சட்டமும், நீதி மன்றமும் பிற வேறுபாடுகளும் கிடையா! எனினும் எங்களுரில் உள்ளுர்க் கலகத்தில் சேரி வாழ் ஏழைமக்கள் சேரத் துணிந்தார்கள். ஊரில் உள்ள பெரிய கட்சி முதலிமார்களெல்லாம் ஒரு நாள் தத்தம் வயலில் தாமே ஏர் கட்டி உழத் தொடங்கி ஞர்கள். தூரத்தே சேரியார் நின்று கண்டுகொண்டே இருந்தார்கள். பாவம்; அவர்கள் மேல் பிழை இல்லை. பின்னல் சிறிய கட்சியைச் சேர்ந்த முதலியார் ஒருவர் அவர்களைத் தூண்டினர். அவர்கள் வயலுள் புகுந்து உழுது கொண்டிருந்தவரை அடித்தும் கத்தியால் கீறியும் பலவகைத் துன்பம் செய்து ஏர்களை அவிழ்த்து உழாமல் செய்துவிட்டார்கள். அன்று காலை நிகழ்ந்த இச் சிறு வினைப்பொறி இரவில் பெருநெருப்பாக மூண்டுவிட்டது, ஊரில் உள்ள பெருந் தலைகள் ஒன்றுகூடின. தம்மை அவமானப்படுத்தியவரை ஊரிலேயே வாழவிடக் கூடாது என நினைத்தார்களோ என்னவோ, அனைவரும் அன்றிரவே அதற்குக் கழுவாய்த் தேட முயன்றனர். யார் யார் முன்னின்னர்கள், எவ்வெவ்வாறு சூழ்ச்சி செய்தார்கள் என்பனவெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ அன்று இரவு ஊரே போர்க்களமாகிவிட்டது என்று சொன்னர்கள். நான் அன்று அங்கு இருந்திருப்பேயிைன் அலறிப்புடைத்து அல்லலுற்றிருப்பேன். அந்தப் பயங்கர இரவில் யார் யார் என்னென்ன செய்தார்களோ! அந்த அம்பலவாணன்தான் அறிவார். போர் மூண்டுவிட்டது. சேரியார் விரட்டப்பட்டனராயினும், இறுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளிப்பட்ட துப்பாக்கிக் குண்டு, ஊரில் சிலர் உயிரைக் கொண்டு, பலர் உட லை யும் காயப்படுத்தி