பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் சண்டை 127 விட்டது. பிறகு ஒரே அமளி - போலிசு வந்திருக்கும். மேல் ஏதேதோ நடைபெற்றிருக்கும். வழக்கு மன்றம் - விசாரணை - முடிவு - இப்படிப் பலப்பல. மறு நாள் செங்கல்பட்டில் எங்கள் வீட்டிற்கு ஆள் வந்தது. அதற்குள் ஊர் நிகழ்ச்சியைப்பற்றிப் பல ப் பலவாறு தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. எனது பாட்டியார் எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டுக் கண்ணிரை ஆருகப் பெருக்கினர்கள். - அவர்கள் அந்த ஊரில் நன்ருக வாழ்ந்தவர்கள். அந்த ஊரில் வாழ்ந்த அத்தனைக் குடும்பங் களும் ஒரே கு டு ம் ப ம் என்னுமாறு பலகாலம் கூடி வாழ்ந்ததை அவர்கள் கண்ணுலேயே கண்டவர்கள். அவர்தம் கண்முன்பே இத்தகைய கொடுமை நடப்ப தென்ருல் அவர்கள் வருந்தாது என்ன செய்வார்கள்? இரண்டொரு நாளில் எல்லா உண்மைகளும் தெரியலாயின. பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. கொன்றவரும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரும் செங்கற்பட்டிற்குக் கொண்டுவரப்பட்டார்கள். பிறகு வ ழ க் கு நடந்தது. எப்படியோ ஒருவாறு எல்லா - வழக்குகளும் முடிவுற்றன என்ருலும் எனது பாட்டியார் இறக்கும்வரையில் இந்தக் கொடுமைகளைப்பற்றி யெ ல் லாம் வந்தவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி வருந்துவார்கள். எனக்கும் ஊர் செல்வதற்கே ஒரே பயங்கரமாக இருந்தது. இப்படி ஒரு குலத்தில் பிறந்து, அறம் பேணும் அறிவுக் கோயில் வழியாக, அடங்காப் போர் நடத்தி, ஊரைக் கெடுத்த மக்கள் யாராயினும் சரி அ வ ர் க ள் செயல் உலகம் உள்ளளவும் மறையாது. இன்று ஊரில் அந்தப் பெரு வேறுபாடுகளெல்லாம் மறைந்து ஒரளவு அமைதி நிலை கொண்டிருப்பது காண உளம் மகிழ்கின்றது.