பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்படி 129 கூட்டாளிகளின் கைப்பொம்மையாகக் கூடாது எனக் கவன்ருர்கள் அன்னையார். எனினும் நான் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கருதிய காரணத்தினலேயே தனியாகப் பாட்டியுடன் கூட்டிச் செங்கற்பட்டிற்கு அனுப்பி ஞர்கள். காஞ்சிபுரம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது என்ருலும், அங்கு அடிக்கடி விழாவும் வேடிக்கையும் நடப்ப தாலும் சுற்றுப்புறங்களிலிருந்து பலரும் வந்துகொண்டே இருப்பதாலும், அன்னையார் செங்கற்பட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அத்தகைய ஆரவாரங்கள் இல்லை. என்ருலும் மாணவர் கூட்டத்தில் நல்லவர் கெட்டவர் இரு சாரரும் வாழ்ந்துதான் இருந்தார்கள். நான் ஊருக்குப் புதியவன் ஆதலால் யாரோடு பழகுவது என்று தெரியாது அலமந்தேன். மேலும் மேற்பார்வையில் நடத்திச் செல்ல ஆசிரியரோ உற்ற அன்னையோ அருகில் இல்லாதது குறையாகத்தான் இருந்தது. நான் நான்காவது படிவம் பயின்றுகொண்டிருந்த அந்த நாளில் இடைவேளை நேரத் திற்கு வீட்டுக்கு உணவுண்ண வந்துவிடுவது வழக்கம். ஒரு நாள் எவ்வாருே பள்ளியில் தங்கினேன். அன்றுதான் பிரம்படி பெற்றேன். எங்கள் பள்ளியில் முறைப்படி இருக்க வேண்டிய தலைமை ஆசிரியர் நீண்ட விடுமுறையில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேருெருவர் அப் பதவியில் பணி யாற்றினர். அவர் வயதில் இளையவர். வகுப்புகளுக்கு முடுக்காக வருவார். பிள்ளைகளைப் பல கேள்விகள் கேட்பார். பிள்ளைகள் தவறு செய்வார்களாயின் தட்டாது தண்டனையும் தருவார். யாரிடத்திலும் அவர் தாராளமாக மனம் விட்டுப் பேசி அறியார் என எண்ணுகின்றேன். ஆசிரியர்கள் எல்லோரும்கூட அவருக்கு அஞ்சுவார்கள். பின் மாணவர்களைப் பற்றிக் கேட்பானேன்! இவ்வளவு