பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையும் அத்தனும் 25 பாகப் பிரிவினை செய்யும் வகையில் எழுதிவைத்துவிட்டுச் சென்ருர்கள். என்ருலும் அவர்கள் பங்கிடும் போது நடை பெற்ற சண்டை சச்சரவுகளுள் பல எனக்குநினைவில்லை என் ருலும் ஒரு சில இன்னும் நினைவில் இருக்கின்றன. இந்தச் சண்டை சச்சரவுகளைச் சுமார் நூறு வீடுகளுக்கு மேலிருக் கும் எங்கள் ஊரிலுள்ள உறவினரில் ஒருவர்கூடத் தீர்த்து வைக்க முன்வரவில்லை. அதற்கு மாருக உடன் பிறந்த சகோதரிகளையும் அவர்தம் கணவர்களையும் தூண்டி விட்டு அதல்ை தாம் தாம் லாபமடையப் பார்த்தார்கள். பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் உறவினர் வந்து பாகப் பிரிவினை செய்து வைத்தார். இருபது வயதுகூட நிரம்பாத என் அன்னையார் தனிக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. உடன், என் மீது உள்ள பாசத்தால் என் பாட்டியும் அன்னை யின் அத்தையுமாகிய காமாட்சி அம்மாள் எங்களோடு தங்கி யிருந்தார்கள். - எனது தந்தையார் நான் மூன்ருவது பாரம் படித்துக் கொண்டிருக்கும் போது, எனது பதின்ைகாவது வயதில் மரணமடைந்தார். அவர்கள் தாயாரோடு அடிக்கடி சண்டை இட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போதெல் லாம் சிறிது சிறிதாகப் புத்தி தெளிவடைந்த காலமாதலால் அதையெல்லாம் பார்த்துத் திகைப்பேன்-அழுவேன்-வருந் துவேன். ஆலுைம் என்னல் ஒன்றும் செய்ய முடியாது. பக்கத்தில் வீட்டில் இருந்த பெரியம்மா, பெரியப்பாவோ அன்றித் தெரிவிலுள்ள மற்றப் பெரிய மனிதர்களோ இந்தச் சண்டைகளை யெல்லாம் வேடிக்கை பார்ப்பார்களே தவிரச் சமாதானம் செய்யமாட்டார்கள். பாவம் என் தந்தைக்கு அவர் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் .ெ கா டு க் க ப் பெர்ருள் வேண்டுமே என்ற பிரச்சினை. என் அன்னைக்கோ உள்ள ஒரே மகனிடம் தன் தந்தையார் வைத்துப்போன 3