பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 இளமையின் நினைவுகள்


சுற்றிப் பார்த்தமையில் பலவிடங்களில் உள்ள வயல்கள் தெரியும். என்றாளும் பயிரிடத் தெரியாது. எனது மகனுக்கோ ஊரில் உள்ள நிலங்களே தெரியாது. ஊருக்குச் செல்லக் கூட அவனுக்கு விருப்பமில்லை. இப்படிக் கிராமந்தோறும் வளம் பெருக்கி உழவுத் தொழில் செய்திருந்த மக்கள் பலர் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகர வாழ்வை நாடி வருவது மிகச்சாதாரணமான ஒன்றாுகிவிட்டது.அம்மா அவர்கள் அடிக்கடி என்ன அருகழைத்துப் புத்திமதி சொல்லுவார்கள். அப்பா சில நாட்கள் வீட்டுக்குக்கூட வரமாட்டார். என்னை எங்காவது வழியில் கண்டால் சாப்பிட ஏதாவது 'மிட்டாய்', 'பிஸ்கோத்து கொடுப்பார். அதை வாங்கினது தெரிந்தாலோ அம்மா அடிப்பார்கள். அப்பா என்னைப் பொறுத்த வரையில், என்னை ஒன்றும் செய்யாததால், நல்லவர் என்னுமாறே இருந்தார். அதற்கு நேர்மாறாக்ுக, நான் செய்த தவறுகளுக்கெல்லாம் அம்மா அடித்துத் தண்டிப்பார். ஆதலால் சில் நாட்கள் அவர்கள் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வரும். என்றாளும் அவர்கள் என் வளர்ச்சியிலும் படிப்பிலும் கொண்ட அக்கறையினைச் சில வேளை எண்ணும் போது அந்தச் சிறுவயதிலேயே பூரிப்பேன். இன்று பெரிய வனை பிறகு அம்மாவைத் தெய்வமாகவே கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளேன். கொண்டாடுகிறேன். அவர்கள் அடித்த ஒவ்வொரு அடியும் என்னை வாழ்வுப் பாதையில் ஒரோர் படி முன்னேற வைத்தது என்னலாம். இவ்வாறெல்லாம் என்னைப் படிக்கவைத்த அன்னையார் பின் நான் மேல் வகுப்பிற்குச் செங்கற்பட்டுக்குச் செல்ல நினைத்தபோது அன்பின் காரணமாக என் படிப்பைத் தடுக்க நினைத்தார்கள். நான் அவர்களையும், அவர்கள் முன்னேர் கட்டிய வீட்டையும் பிற நிலபுலங்களையும் விட்டுச் செல்லலாகாதே என்ற காரணத்தால் நான் படிக்க