பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இளமையின் நினைவுகள் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என் வாழ்வை ஒளிபெறச் செய்வதற்காகவே தன் வாழ்வை ஒறுத்துத்தியாகம் செய்து, எனக்காகவே வாழ்ந்து, நான் செம்மை நெறியில் வாழ வழிகாட்டியாக நின்று தெய்வ மாக விளங்கினர்கள்; விளங்கி வருகிருர்கள். இன்றும் நான் அல்லலுறும்போதும், அன்றி மகிழ்வில் திளைக்கும்போதும், கனவில் தோன்றி நலக்கேடுகளை அறிவிக்கும் தெய்வமாக நிற்கின்ருர்கள். காலஞ் சென்ற என் மனைவி சந்திரா மணியின் கனவில் அடிக்கடி தோன்றிக் குடும்ப நிலைபற்றி எல்லாம் குறிப்பாக விளக்கிச் சென்றதாகப் பலமுறை அவள் கூறக் கேட்டிருக்கிறேன்-அனுபவித்தும் இருக்கிறேன். ஆம். இன்றும் அன்னையும் இவ்வாண்டு மறைந்த ம ன வி சந்திராமணியும் என் குடி காக்கும் தெய்வங்களாக இரு புறமும் எங்களைக் காத்து வருகிருர்கள் என்பதை நான் முற்றும் நம்புகிறேன். அவர்கள் வழி என் கான் முளைகள் வாழும் வழியறிந்து சிறப்பார்கள் என்னும் துணிபுடையேன்.