பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இளமையின் நினைவுகள் தெருவே நாடக மேடையாய்க் கழிந்தது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நான் பல தடவை அவர்களுக்காக இந்த நாடகப் பாட்டுகளைப் பாடி இருப்பேன். இராகம் ஒன்றும் தெரியாவிட்டாலும் அந்தக் கிழங்களுக்கு எப்படி யாவது பாட்டைக் கேட்பதில் ஒர் ஆசை. நான் வாலாஜா பாத்தில் எட்டாவது படிக்கும் காலத்தில் கூட ஒரிருநாட்கள் அப்பாடல்களை அவர்களுக்காகப் பாடி இருக்கிறேன். இப்படி ஆரம்பப் பள்ளியில் படித்து, நடித்து, பிறகு ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆரும் வகுப்புக்கு வாலாஜாபாத் திற்கு வந்து சேர்ந்தேன். ஊரில் படித்த அந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள் இன் னும் ஒன்றன் பின் ஒன்ருக வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு சில கண்டு மேலே செல்லலாம்.