பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இளமையின் நினைவுகள் சில சமயங்களில் நானே மத்தளத்தை வேடிக்கையாகத் தட்டுவதும் உண்டு. அது அலறும். நான் அடிப்பதைப் பொறுக்காமல் அது கத்துவது போல் இருக்கும். நான் பயந்துவிடுவேன்; என்ருலும் வேடிக்கையாக இடது கை முட்டியை மடித்துக்கொண்டு வலது கையால் மத்தளத்தின் ஒரு பக்கத்தை அடிப்பது போல் அடித்துக் கொள்வேன். அங்கு உட்கார்ந்துகொண்டே அவர்கள் அடிக்கும்போதே அப்படி வேடிக்கையாக அடிப்பதும் உண்டு. தனியாகத் தெருவில் செல்லும்போது கூட எதையோ எண்ணிக் கொண்டே கைத்தட்டுதலையும் செய்துகொண்டிருப்பேன். இப்போதும் சிலர் சினிமாப் பாடல்களைத் தம்மை மறந்து தெருவில் பாடிக்கொண்டு போவதைப் பார்க்கலாமல்லவா. என் மத்தள நண்பருடைய தந்தையார் வயதானவர். அவர் எப்போதும் திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டிருப் பார். உள்ளே நாங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் சில சமயம் அவருக்குத் தொல்லை தரும். ஏண்டா பசங்களா? உங்களுக்கு வேலை இல்லையா? இங்கே வந்து எல்லாம் கூத் தடிக்கிறீர்களா? என்று கோபிப்பார். என்ருலும் அவர்தம் மகளுர் எப்படியாவது நன்ருக மத்தளம் தட்டக் கற்றுக் கொள்வதில் அவருக்குத் தனி ஆர்வம் இருந்த காரணத் தால் எங்கள் தொல்லைகளை யெல்லாம் கூடியவரையில் பொறுத்துக் கொள்வார். ஒருநாள் காலை நான் தெரு வழியாக எங்கள் வீட்டுப் பசுமாடுகளை மந்தைக்கு ஒட்டிக்கொண்டு போ ேன ன். எங்கள் தொழுவத்திலிருந்து தெருவழியாகத்தான் மாடுகளை ஒட்டிச்செல்லவேண்டும். நாள்தோறும் நான் காலையில் எழுந்து மாட்டை ஒட்டிக்கொண்டு சென்று மந்தையில் விட்டுவிட்டு, அப்படியே ஆற்றுக்குச் சென்று காலைக்கடன்