பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இளமையின் நினைவுகள் போடா போ' என்று அவனை அதட்டினர். நாங்கள் உண் மையில் பயந்துவிட்டோம். டே பசங்களா ! இங்கே வாருங் கடா என்று அவர் அதட்டிக் கூப்பிட்டார். எங்க்ளை ஏதோ செய்யப் போகிருர் எனப் பயந்து கொண்டே அருகே சென் ருேம். ஐயரைக் கூப்பிட்டு இந்தச் சனியன்களுக்கு இரண்டு கை போடுங்கள்; தொலையட்டும் என்ருர். அவர் உடனே தம் திருக்கையால் எடுத்து ஆளுக்கு ஒரு கைச் சர்க்கரைப் பொங்கலைக் கொடுத்தார். 'ஓடிவிடுங்கள். போய் ஆற்றில் தின்னுங்கள். யாரிடமும் சொல்லாதீர்கள்' என்று ஆணை யிட்டு எங்களை வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்திக் கொள்ளச் சென்ருர். பாவம் ! அவர் தர்மகர்த்தா. கோயில் அறத்தைப் பாதுகாக்க வந்த உத்தமர். கோயில் பணத்தை எல்லாம் பிறர் கொள்ளைகொள்ளா வகையில் பாதுகாத்து, நல்லமுறை யில் அறம் சிறக்கச் செயலாற்ற வேண்டிய அன்பர் அவர். ஆல்ை அன்ருடம் கோயில் பணத்தில் இப்படிப் பலப்பல பண்டம் பலகாரங்கள் செய்து மாலைதோறும் தாம் சுவைத்து உண்பதோடு வீட்டுக்கும் கொடுத்தனுப்புவாராம். அப்பாவி களாகிய நாங்கள் வேளை தெரியாது உள்ளே சென்றுவிட் டோம். ஆகவே அவர் வசைவுக்கு ஆளானுேம். எங்கள் வீட்டில் அம்மா அ டி க் க டி சொல்லுவாள் கோயில் சொத்துக்கு ஆசை வைக்காதே என்று. இப்போது கோயில் சோறு என் கையில் இருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. அதைச் சாப்பிடுவதா வேண்டாமா என எண்ணிக் கொண்டே இருந்தேன். என் நண்பனே அதை நன்ருகச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டான். என்ருலும் தின்னும்போது எத்தனையோ எ ண் ண ங் க ள் உள்ளத்தே ஊசலாடின. எனக்குப் புத்தி தெரிந்த அந்த