பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மிட்டாய்ச் சண்டை எனது தாயாரும் பெரியம்மாவும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்த பிறகு ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுவதில்லை. எனது தந்தையார் வீட்டுக்கு வராமல் தனியே இருந்து, எப்போதோ பொருள் வேண்டும்போது வந்து சண்டை இட்டுச் செல்லுவார். என் தாயாரே எல்லா வற்றையும் பொறுப்பாகக் கவனித்து வந்தார்கள். எனது பாட்டியார் துணையாக உடன் இருந்தாலும் பெரும்பாலும் மலர் எடுத்தல், மலர் தொடுத்தல் முதலிய பணியிலேயே அவர்கள் காலம் கழிந்தது. எனது வாழ்வோ அன்னையின் ஆணைக்கு அஞ்சி அஞ்சி, கூடியவரையில் மற்றவர்களோடு கலக்கா வகையில் அமைதியாகச் சென்றது. எனது பெரியம்மாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்க வில்லை. அவரும் பெரியப்பாவும்தாம் அவ்வீட்டில், இரண்டு வீடும் பக்கத்துப் பக்கத்து வீடுகள். எனது பாட்டருைம் பெரிய பாட்டனரும் தனியாகப் பங்கிட்டுக்கொண்டு இருந் தார்களாம். பிறகு பெரிய பாட்டருைக்குக் குழந்தைகள் இல்லையாதலால் சிலவற்றைக் கோயிலுக்கு எழுதி வைத்து விட்டு, மிகுந்த நிலபுலன்களையும் அந்த வீ ட் ைட யு ம் தம்பிக்கே கொடுத்துவிட்டு இறந்தாராம். இன்றும் எனது பெரியம்மாவும் அம்மாவும் பாகம் பிரித்துக்கொண்டார்கள். பெரியம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே மறுபடியும் இரண்டும் ஒன்று சேரப்போகிறது என்று ஊரில் உள்ள வர்கள் பேசிக்கொண்டார்கள். ஆகவே எங்கள் பெரியப்பா அப்பேச்சுக்களை முறியடிக்கவேண்டும் என நினைத்தார். மறுமணம் செய்துகொண்டு எப்படியாவது குழந்தைகளைப்