பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்ச் சண்டை 67 மறுபடியும் கூடிக் குலாவுதல் தவறு என்பதும் மட்டும்எனக்கு நன்ருகப் புரிந்துவிட்டன. அவற்றை இன்னும் நான் வாழ் வில் கொண்டுள்ளமையினுல் சிற்சில வேளைகளில் பல சங்க டங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. என்ருலும் அன்னை சொன்ன சொற்கள் அத்தனையும் உண்மைதானே ! என் பெரியம்மாவை அவ்வாறு பிரித்துப் பார்க்கவும் என் மனம் இடம் தரவில்லை. அம்மாவோடு மாறுபட்டார் களாயினும் என்னிடம் அன்பாகவே இருந்தார்கள். ஊரார் கூறியபடி கடைசியில் அவர்கள் இறக்கும் காலத்திலே எல்லாச் செல்வங்களையும் எனக்கே வைத்துச் சென்ருர்கள். அவர்களையும் வாழ்த்தி வணங்காதிருக்க முடியுமோ!