பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னம் வீங்கிற்று 69 வந்தார் என்றும், நான் முன்னமே வேறு பள்ளியில் சேர்ந்து விட்டிருந்தாலும் தாங்கள் தம் பள்ளியில் எடுத்துக்கொள் வதாகக் கூறி அன்னையிடம் இசைவு பெற்ருர்கள் என்றும் அதன்படி மறுநாள் நான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்கே செல்ல வேண்டுமென்பதாக முடிவு செய்யப்பட்டதென்றும் அறிந்தேன். அவர் போ கும் போது என்னைக் கட்டி அணைத்து முதுகில் தட்டிக்கொடுத்துச் சென்ருர். இன்றும் அந்தக் காட்சி என் கண் முன் நிற்கின்றது. தந்தையின் அன்புப் பரிவை நன்ருக அறியாத எனக்கு அவர் பரிவு நல்ல உணர்வூட்டியது. ஆம்! இன்று அவர் வாலாஜாபாத் அப்பா'வாகப் பலபேருக்கு வேண்டுவன உதவி அப் பள்ளியை நன்கு நடத்திவருகிருர், மறுநாள்முதல் நான் இந்துமதப் பாடசாலை மாணவன் ஆனேன். அந்தப் பள்ளியில் உயர் வகுப்புகளில் அதிக மாணவர்கள் இல்லை. கிறித்தவப் பள்ளியில்தான் உயர்ந்த வகுப்புகளில் பல மாணவர்கள் படித்து வந்தனர். இந்தப் பள்ளியில் மேல் வகுப்புக்கள் ஒவ்வொன்றிலும் சுமார் பத்து மாணவர்களே இருந்தார்கள். எ ன் ரு லும் இங்குக் கீழ் வகுப்புக்களில் நிறைய மாணவர்கள் படித்துவந்தனர். இன்று பள்ளிக்கூடத்தில் இடமில்லை என்று சொல்லி மாணவர்களை வெளியேற்றும் காட்சியை ஆண்டுதோறும் கண்களில் காண்கிருேம். ஆனல் அன்று அந்த நிலை இல்லை. இத்துணைப் பெரும் அளவில் பள்ளிகள் அன்று வளர்ச்சி அடையவில்லை என்ருலும், இருந்த சில பள்ளிக் கூடங்களிலும் போதிய மாணவர் தொகை இல்லாதிருந்தது. எனவே இந்துமத பாடசாலை முதல்வரும் ஆசிரியர்களும் ஆண்டுதோறும் பள்ளித் தொடக்க நாட்களில் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் சென்று, பிள்ளைகளைத் தமது பள்ளிக்கு வருமாறு அழைத்து வருவார்களாம். அதே முறையில்தான்