பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலப் போட்டி 79 ஒருவர் பழித்துரைத்தார்கள். என்ருலும் தெருவில் உள்ள வர்கள் சமாதானம் செய்வதை விடுத்து வேடிக்கைப் பார்த் தார்கள். இருவரிடமும் சென்று என்ன வந்தாலும் நிலத்தை விடவேண்டாம் என்றும் சிலர் உபதேசம் செய்தார்கள். ஒரு சிலர் என் தாயாரிடம் வந்து பேசும் பரிவினைக்கண்டு நான் கூடக் கசிந்ததுண்டு. ஆல்ை அடுத்த சில ஆண்டுகளுக் குள்ளேயே அவர்களே பெரியம்மாவிடமும் அதேபோல் பரி வுடன் பேசினர்கள் என்பதை அறிந்த பிறகு, உடன்பிறந்த பெண்கள் இருவரை இப்படித் தட்டிக்கொடுத்துக் குடும் பத்தை நாசமாக்கும் சதிக்கூட்டம் என்ருவது உருப்படுமா என என் இளமை நெஞ்சம் எண்ணியது உண்டு. ஆம், அந்தப் பகை மூட்டிய குடும்பங்கள் இன்று முன்னைவிடத் தாழ்ந்தே நிலை கெட்டு நிற்கின்றன. நான்காம் நாள் அந்த நிலத் தரகர் மறுபடியும் வந்தார். நிலத்தின் விலை நாலாயிரத்து ஐநூறு ஆக ஏறிவிட்டதென் றும் மறுநாளே என் பெரியம்மா பேருக்குப் பத்திரம் எழுத ஏற்பாடாகிவிட்டதென்றும் கூறினர். அம்மா நாலாயிரத்து அறுநூறு என்ருர்கள். இப்படியே இவர்கள் இருவருக்கும் இடையில் சில நல்லவர்'கள் தூக்கிவிட நாலாயிரத்துக்கு முடிந்த நிலம், நாலாயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு எனது அன்னை பேருக்கே விலையும் முடிவு செய்து பதிவும் செய்யப் பெற்றது. ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு சகோதரிகளை வேறுபடுத்தி ஒரு நிலப் போட்டியில் அதிகமாக எழுநூற்று ஐம்பது ரூபாயை இழக்கவைத்த பெருமை ஊரில் ஒரு சில ரைச் சார்ந்ததாகும். இந்த நிலை இன்னும் எல்லாக் கிரா மங்களிலும் இருப்பதனுல்தான் கிராம ம க் க ள் வளர்ச்சி அடையாமல் கெடுகின்றனர். எத்தனையோ கிராமங்களில் பல குடும்பங்கள் ஒன்றி வாழ்ந்த குடும்பங்கள் இடையில் சிலரால் பிரிக்கப்பட்டு நிலைகெட்டு அழிகின்றன. நீதி மன்