பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இளமையின் நினைவுகள் கணவனை இழந்த பெண்களின் கைமைக் கோலத்தை நான் அந்த இளமையிலேயே கண்டிருக்கிறேன். எனவே என் அன்னை இனி எந்தக் கோலத்தில் தோற்றமளிப்பாள் என்று நினைத்தபோது உள்ளமே தடுமாறிற்று. என்ருலும் நான் அதிகமாக வெளியில் ஒன்றும் புலம்பிக்கொண்டிருக்க வில்லை என நினைக்கிறேன். இளமையில் அத்தனின் பிரிவு அதிகமாகத் தெரியவில்லைபோலும். சடங்குகள் முறைப்படி நடைபெற்றன. தந்தையின் ஈமச் சடங்கும் பால் தெளியும் நடைபெற்றன. அன்று நான் அதிகமாகத் துன்பமுற வில்லை. ஆல்ை நான் என் தந்தைக்கு ஈமக்கடன் செய்த அதேவயதில் பதின்மூன்றில் என் மகன் தன் தாய்க்கு ... என் மனைவிக்கு ஈமக்கடன் செய்ய நேர்ந்த இந்த நாளில் நான் மிகமிகக் கசிந்து வாடினேன்; வருந்தினேன். தந்தையார் சடங்கு முடிந்ததும் நான் அதிகமாக ஒன்றும் கவலையுறவில்லை. பால் நடந்த அன்றைய பிற்பகல் நான் என் நண்பர்களுடன் தோட்டத்தின் பின்புறம் விளை யாடச் சென்றுவிட்டேன். கோ லி விளையாடிக்கொண் டிருந்தேன் என நினைக்கிறேன். வெளியூர்களிலிருந்து பல பணியாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் சிலர் நாங்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந் தார்கள். என்னை அறியாத ஒருவர் 'பாவம், இறந்தவருக்குக் கூட இம்மாதிரி ஒரு பிள்ளை இருக்கிறதாமே ! அதை விட்டு விட்டு அவர் போய் விட்டாரே என்ருர். ஆனல் அவர் பக் கத்தில் இருந்த என்ன நன்கு அறிந்த ஒருவர் 'அடடே ! இதோ கோலி ஆடுகிறதே, இதுதான் அவர் பிள்ளை; உனக்குத் தெரியாதா?’ என்ருர். அதுவரையில் என்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்த நான், அவர்கள் பேச் சைக் கேட்டு அயர்த்துவிட்டேன். முன்னவர் 'பாவம் தந்தை இறந்த வருத்தம் கூடத் தெரியாது, இப்படிப் பால்