பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் அதனைத் திறம்படக் கண்காணித்து வரும் அதன் துணைவேந்தர் டாக்டர் W. C. வாமன்ராவ் அவர்கட்கு-என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. இந்நூலை மனமுவந்து ஏற்று வெளியிட்ட திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், குறிப்பாக என்றும் இளையராய் இருந்து புதிய துறைகளில் தமிழை வளர்க்கவேண்டும் என்ற பேரவாவுடைய அதன் அதிபர் திரு.வ சுப்பையா பிள்ளை அவர்கட்கும் என் அன்புகலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். - நமது இராஜாஜி அவர்கள் உலகப் பேரறிஞர்களில் ஒருவர்; உயர்ந்த சிந்தனையாளர். நம் நாட்டு விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டவர். எதிலும் பகுத்தறிவு வழியைக் கடைப் பிடிப்பவராயினும் நம்பிக்கையின் உருவான உத்தம சிலர். காலத் தொலைவில் நடைபெறவேண்டியவற்றை முன்னரே கணித்துக் காட்டவல்ல ஆழ்ந்த பெருநோக்குடையவர். இடத் தொலைவில் நடைபெறுவனவற்றை உடனுக்குடன் காணவல்ல தொலைக் காட்சிச் சாதனத்தை விளக்கும் இளைஞர் தொலைக் காட்சி என்னும் இந்நூல் பாரதத்தின் முதல் இரத்தினமாகிய அவரது எண்பத்தெட்டாவது ஆண்டு நிறைவினைப் பாராட்டும் மலராக வெளிவருகின்றது. அவரது ஆசியைப் பெற்றுத் தமிழ் நாட்டுச் சிறுவர்களின் கைகளை அடையும் இந்நூல் அவர்கட்குச் சிறந்த அறிவியலறிவினை நல்கும் என்பது உறுதி. என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு என்னுளே தோன்ருத் துணையாக நின்று இச்சிறு நூலை வெளியிட என்னை இயக்கிய எல்லாம்வல்ல இறையருளை மனம், மொழி, மெய்களால் நினைத்து வாழ்த்தி வணங்குகின்றேன். - 鸚s} ந. சுப்பு ரெட்டியார்.