பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளிச்சேர்க்கை

105

கேட்க இயலுவதில்லை. இதனால் நம் பேச்சொலியைப் பல மடங்குப் பெருக்கி தூரத்திலுள்ளவர்களும் கேட்கும்படி செய்யக் கருவி உள்ளது. அதுவே ஒலிபெருக்கி. நாம் எழுப்பும் ஒலியைப் பலமடங்குப் பெருக்கித் தருவதால் இக்கருவி இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

மேடையில் நாம் பேசினாலோ அல்லது பாடினாலோ அவ்வொலியை நம்முன் வைக்கப்பட்டிருக்கும் 'மைக்' எனும் மைக்ராபோன் கருவி ஈர்க்கிறது. அவ்வாறு கிரகிக்கும் ஒலிகளை மின் அலைகளாக மாற்றி மின்கம்பி வழியே ஒலி பெருக்கிக் கருவிக்குக் கொண்டு செல்கிறது. 'ஆம்ஃப்லிஃபயர்’ எனும் இக்கருவி மின் அலைகளாக ஒரு ஒலியைப் பலமடங்குப் பெருக்கி ஒலி அலைகளாக மீண்டும் ஒலிப்பான் மூலம் வெளிவிடுகின்றது. இதில் ஒலியைப் பெருக்கவோ குறைக்கவோ வசதிகள் உண்டு.

ஒளி : பொருட்களைப் பார்க்க ஒளி வேண்டும். இருட்டு அறையில் இருக்கும் பொருட்களைப் பார்க்க முடியாது. ஒளியானது பொருளின் மீது பட்டு மீண்டும் நம் கண்களை அடையும்போதுதான் பொருள் பார்க்க இயலுகிறது.

ஒளியானது கண்ணாடி, காற்று, நீர், வெற்றிடம் ஆகியவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும் திடப்பொருட்களான மரம், இரும்பு, கல் போன்றவற்றின் ஊடே ஒளி ஊடுருவ முடியாது. இவை ஒளி புகாப் பொருட்கள் ஆகும். எண்ணெய் தோய்ந்த காகிதம் வழியே ஒளி கசியும். ஊடகத்தின் அடர்த்திக்கேற்ப ஊடுருவும் ஒளிவேகம் அமையும்.

ஒளி மிகுந்த வேகத்தில் விரைந்து பாயும். ஒரு வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் எனக் கணக்கிட்டுள்ளனர். காற்றிலும் வெற்றிடத்திலும் இந்த வேகத்தில் செல்லும் ஒளி நீரில் வினாடிக்கு 2.22,000 கி மீ. கண்ணாடியில் வினாடிக்கு 1,98 000 கி.மீ. ஆகும்.

ஒலியைவிட ஒளி விரைந்து பாய்வதால் இடி மின்னல் ஏற்படும்போது இடி ஓசையைவிட மின்னல் ஒளியை முன்னதாகக் காண முடிகிறது.

ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் பாயும்போது வளைந்து செல்லும். நீருள் காணும் நீளமான பொருட்கள் வளைந்துள்ளவை போல் காண்பதற்கு இதுவே காரணமாகும். இதை ஒளி விலகல் என்பர்.

சூரியன் நமக்கு இயற்கையான ஒளியை நாளும் வழங்குகிறது. வெண்மை ஒளியாகத் தோன்றும் சூரிய ஒளிக்கதிரில் ஏழு வண்ணங்கள் அடங்கியுள்ளன. நீர்த் திவலைகளின் ஊடாகச் சூரியக் கதிர் செல்லும்போது ஏழு வண்ணங்கள் வானவில்லாகத் தெரியும்.

முற்காலத்தில் செயற்கையாக ஒளி பெற எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மெழுகுதிரி விளக்குப் போன்றவை பயன்பட்டன. இன்றோ விதவிதமான மின்விளக்குகள் ஒளி பெறப் பயன்படுத்தப்படுகின்றன.

நமக்கு மட்டுமல்லாது தாவரங்கள் உயிர் வாழ்வுக்கும் ஒளி அவசியமாக உள்ளது. தாவரங்கள் சூரிய ஒளி மூலம் நீரையும் கரியமில வாயுவையும் சேர்த்து மாச்சத்தையும் சர்க்கரைச் சத்தையும் பெறுகின்றன. சூரிய ஒளிச் சேர்க்கையால் இவற்றைப் பெறுவதால் இந் நிகழ்ச்சி 'ஒளிச் சேர்க்கை’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒளிச்சேர்க்கை : பெரும்பாலான தாவரங்களில் உள்ள இலை முதலான பகுதிகள் பச்சை நிறமாகக் காணப்படும். இதற்குப் பச்சையம் எனும் நிறமியே காரணமாகும். இஃது குளோரோபில் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவின் ஒரு பகுதியை சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு தயாரித்து கொள்கின்றன. நீரையும் கரியமில வாயுவையும் கொண்டு சூரிய சக்தி மூலம் சர்க்கரை அல்லது மாச் சத்தை உருவாக்கிக் கொள்கின்றன. இந்நிகழ்வே 'ஒளிச்சேர்க்கை’ என்று அழைக்கப்படுகிறது.

ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது பச்சையம் ஆகும். இது காளான், ஒரு சில ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர பிற எல்லாத் தாவரங்களிலும் உண்டு. தாவரங்கள் பச்சைப் பசேலென பசுமையாகத் தோன்றுவதற்கு இப்பச்சையமே முழு முதற்காரணம். தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவைச் சூரியஒளி உதவியோடு தயாரித்துக் கொள்வதற்கு இதுவே அடிப்படையாய் அமைந்துள்ளது.

இலைகளின் அடிப்புறத்தில் எண்ணிலடங்கா நுண்துளைகள் உள்ளன. காற்று