பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கண்ணாடி

கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

குறைந்த ஒளியோ மிக அதிக ஒளியோ கண்களுக்குக் கெடுதல் உண்டாக்கும். அளவான ஒளியிலேயே படிக்க வேண்டும். படிக்கும் போது நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்து படிக்க வேண்டும். படிக்கும்போது படிக்கும் புத்தகத்திற்கும் கண்களுக்குமிடையே சுமார் 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். கண்களில் தூசி ஏதும் விழுந்துவிட்டால் வெறுங்கையாலோ அன்றி முரட்டுத் துணியாலோ தேய்க்கக் கூடாது. கண்களைச் சுத்தமான நீரால் கழுவு வேண்டும். அதிக நேரம் கண் விழித்தல் கூடாது. போதிய அளவு இமைகளை மூடிக் கண்களுக்கு ஓய்வுதர வேண்டும். கண்பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்தே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

மனிதர்களைப் போன்றே பிற உயிரினங்களுக்கும் கண்கள் அமைந்துள்ளன. ஈ போன்ற வைகட்கு ஆயிரக்கணக்கான கண்கள் 'கூட்டுக் கண்' களாக அமைந்துள்ளன. இவற்றின் மூலம் அவை எப்பக்கத்தையும் காணமுடியும்.

கண்ணாடி : இன்றைய நாகரிக வாழ்வில் கண்ணாடி மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நாம் நாள்தோறும் முகம் பார்க்கவும் நமக்கு ஏற்படும் பார்வைக் குறைவைப் போக்கிக் கொள்ளவும் கண்ணாடி பெரிதும்

கண்ணாடி

பயன்படுகிறது. மருந்து பானம் முதலானவைகளை வைக்கவும் கண்ணாடியாலான போத்தல்கள் அதிக அளவில் பயன்படுகின்றன.

தூய்மையாக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, சலவைச் சோடா ஆகியவைகளே கண்ணாடி செய்வதற்கான மூலப் பொருள்கள். இவற்றை 15000 வெப்பத்தில் கொதிக்க வைத்தால் அவை உருகி பாகு போலாகும். அக்குழம்பை பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுக்களில் ஊற்றி பலவகை வடிவக் கண்ணாடிப் பொருட்களாக வார்த்தெடுப்பார்கள். இக்கண்ணாடிக் குழம்பை வாயால் ஊதியும் பலவடிவப் பொருட்களை உருவாக்குவதும் உண்டு.

வாயால் ஊதி கண்ணாடி உருவாக்குதல்

கைதவறிக் கீழே விழுந்தால் கண்ணாடிகள் உடைந்து விடும். எனவே, இக்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையா இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும் கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பார்வைக் குறைவைச் சரிசெய்யவும் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணியவற்றை ஆராயப் பயன்படும் நுண்பெருக் காடிகளும் படப்பிடிப்புக் கருவியான காமிரா லென்சுகளும் சோதனைக் குடுவைகளும் கண்ணாடியாலேயே உருவாக்கப்படுகின்றன.

சிலவகை வண்ணக் கண்ணாடிகள் வழக்கமான மூலப்பொருட்களுடன் இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற தாதுப்பொருட்களைக் கலந்து செய்கிறார்கள்.

சுமார் நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே கண்ணாடி செய்யப்பட்டு வருகிறது. முகம் பார்க்கவும் கைவளையல் போன்ற அலங்காரப் பொருட்கள் செய்ய மட்டுமே பயன்பட்டுவந்தது. அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று மனித வாழ்வில் அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் பொருட்களாகக் கண்ணாடிப் பொருள்கள் அமைந்துள்ளன.