பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெப்ளர்

143

ஜெர்மனியில் உள்ள ஸ்டிராயர்க் என்ற இடத்தில் தங்கியிருந்தபோதுதான் 1489ஆம் ஆண்டில் முதன்முதலாக அச்செழுத்துக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலானார், சிறிய மரத்துண்டுகளில் எழுத்துக்கள் தலைகீழாக இருக்குமாறு செதுக்கி அவற்றினிடையே துளையிட்டுக் கயிற்றில் கோர்த்தார். பின்னர் அவற்றை மையில் தோய்த்து தோல் பொருளின் மேல் வைத்து அழுத்தினார். நேர் வடிவில் அச்செழுத்துக்கள் பதிந்தன. இதுவே

கூட்டன்பர்க்

அச்செழுத்தின் துவக்கமாகும். அதன்பின் தொடர்ந்து முயன்று, தொடர்ந்து அச்செழுத்துக்களைக் கொண்டு அச்சிடும் முறையை ஆய்ந்து கண்டறிந்தார். தன் நண்பர் ஜோகன் பஸ்ட் என்பாருடன் இணைந்து அச்சிடும் எந்திரம் ஒன்றையும் வடிவமைத்தார். அதன் துணைகொண்டு 'மாசிரின் பைபிள்’ என்ற நூலை முதன் முதலாக இவ்வெந்திரத்தைக் கொண்டு அச்சிட்டனர்.


கெப்ளர் : இவர் புகழ்பெற்ற ஜெர்மன் நாட்டு வான ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது முழுப்பெயர் ஜோஹன்னஸ் கெப்ளர் என்ப தாகும்,

இன்று வேகமாக வளர்ந்துவந்துள்ள வானவியல் ஆராய்ச்சிக்கு அழுத்தமான அடிப்படையை அமைத்துத் தந்தவர் இவரே. தம்மால் எவ்வாறு பார்க்க முடிகிறது என்பதைக் காரண காரியத்தோடு விளக்கிய பெருமை இவரையே சாரும். தொலைநோக்கியைக் கொண்டு வெகுதொலைவுக்கு அப்பால் உள்ளவற்றைக் காணமுடியும் என்பதை செயல்பூர்வமாக எண்பித்தவரும் இவரே. நிலவுக் காலங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கும் மாபெரும் அலைகள் தோன்றுவதற்கும் நிலவே காரணம் என்பதைக் கண்டறிந்து கூறியவர்.

நியூட்டன் போன்றவர்களின் ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கிய கெப்ளர் 1571ஆம் ஆண்டு தென்மேற்கு ஜெர்மனியில் வெய்ல் எனுமிடத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதுச் சிறுவராக இருந்தபோது கடுமையான அம்மை நோயால் தாக்கப்பட்டார். இந்நோயின் கடுமை இவரது கையையும் கண்ணையும் பெரிதும் பாதித்தது. கையை ஊனமாக்கியது போன்றே கண்ணையும் ஒளிகுன்றச் செய்தது.

இதனால் சிறிதும் மனந்தளராத கெப்ளர் படிப்பதிலும் ஆய்வுணர்வோடு சிந்திப்பதிலும் பேரார்வம் காட்டினார். டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது இவரது படிப்புத் திறமை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர். விரைவிலேயே இவர் வானவியலில் வல்லுநர் எனும் சிறப்புக்குரியவரானார்.

அதே சமயத்தில் நிலத்தின் இயக்கம்பற்றி ஆய்ந்துவந்த போலந்து நாட்டு வானவியல் நிபுணர் கோப்பர்னிக்கஸ் தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பத்திரிகைகளில் ஆய்வுக்

கெப்ளர்

கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அக் கட்டுரைகளைப் படித்து வந்த கெப்ளர் மிகவும் மகிழ்ந்தார். பூமியின் இயக்கம்பற்றிய கோப்பர்நிக்கசின் கண்டுபிடிப்புகள் முழுக்க