பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரன்

149

னால் இரும்பு மற்றும் கண்ணாடிகளை அறுக்க முடியும். நிலைக்காந்த எஃகு தயாரிக்க கோபால்ட்டுடன் இரும்பையும் நிக்கலையும் கலந்து உருவாக்குகிறார்கள். இவை தொலைபேசி மற்றும் ஒலிப்பான் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. கோபால்ட் கலவைகள் நிறமுண்டாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கும் எனாமலுக்கும் நிறம் உண்டாக்கக் கோபால்ட் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.

கோபால்ட்டின் ஐசோடோப் Co0 ஆகும். இது கதிரியக்கமுடையதாகும். இக்கதிர்கள் புற்றுநோய்க் கிருமிகளைக் கொல்ல வல்லனவாகும். எனவே, புற்றுநோய் மருத்துவத்தில் இஃது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

கோபால்ட் உலோகம் கனடா நாட்டிலுள்ள அன்டோரியோ எனுமிடத்திலும் ஆஃப்ரிக்க நாட்டிலுள்ள காங்கோவிலும் அதிக அளவில் கிடைக்கின்றன. கோபால்ட் உலோகத்தின் அணு எண் 27 ஆகும்.


சந்திரன் : விண்ணில் காணும் கோளங்களுள் வடிவாலும் அழகாலும் சிறப்புற்று விளங்கும் கோள் சந்திரன் ஆகும். சந்திரனை 'நிலா' என்றும் அழைப்பர். பூமிக்கு அருகே உள்ள கோளம் ‘சந்திரன்’ ஆகும்.

பூமியில் காணப்படுவது போன்றே சந்திரனிலும் மேடு பள்ளங்கள் காணப்படுகின்றன. மலைகளும் பாறைகளும் உள்ளன. பூமியைப் போன்றே காடு மேடான பகுதிகளைக் கொண்டதாக சந்திரன் விளங்குகிறது. எனவே, சந்திரன் பூமியின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர் பிரிந்து சென்று, தனிக்கோளமாகியது என அறிவியலார் கருதுகின்றனர். சந்திரனில் புல்பூண்டுகளோ உயிரினங்களோ அறவே இல்லை.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள இடைவெளி 8,84,000 கிலோமீட்டர் தூரமாகும். சந்திரனின் குறுக்களவு பூமியின் குறுக்களவில் நான்கில் ஒரு பகுதியாகும். அதாவது, 3,400 கிலோ மீட்டர் தூரமாகும். பூமியின் கனத்தில் நாற்பதில் ஒரு பங்குதான் சந்திரன் கனம். எடையைப் பொறுத்தமட்டில் பூமியின் எடை சந்திரனின் எடையைப்போல் 82 மடங்கு அதிகம் என்பர்.

பூமியைப் போன்றே சந்திரனும் இருவகைச் சுழற்சிகளைக் கொண்டதாக விளங்குகிறது. ஒன்று, தன்னைத்தானே சுற்றிக்கொள்வது; இரண்டு, பூமியைச் சுற்றி வருவதாகும். சந்திரன் ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 27 நாட்கள், 7 மணி, 48-1/9 நிமிட நேரமாகிறது. சந்திரன் பூமியைச் சுற்ற 29 நாட்கள் 12 மணி, 44 நிமிடம், 2.8 வினாடி ஆவதாகக் கணக்கிட்டுள்ளனர். சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் பூமியைச் சுற்றும் வேகமும் சமமாகும். இதனால்தான் நாம் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிகிறது. பூமியைப் போலவே சந்திரனுக்கும் இரவு பகல் உண்டு. ஆனால், பூமியில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம். ஆனால், சந்திரனில் பகல் 15 நாட்கள், இரவு 15 நாட்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன் காட்சியளிப்பது போலவே, சந்திரனிலிருந்து பார்க்கும் போது பூமி காட்சி தருகிறது. காரணம், இரண்டு கோளங்களும் சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதேயாகும்.

பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான நேர்கோட்டில் சந்திரன் வந்தால், அது நம் பார்வைக்குத் தென்படுவதில்லை. அதை அமாவாசை என்கிறோம். அதே போன்று சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே நேர்கோட்டில் பூமி வந்தால் அன்று முழு வடிவிலான சந்திரனைப் பார்க்க இயல்கிறது. இதுவே பௌர்ணமி தினமாகும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையுள்ள தேய்பிறை 15 நாட்கள் நீடிக்கும். அதே போன்று அமாவாசை முதல் பௌர்ணமி வரையுள்ள 15 நாட்கள் வளர்பிறைக் காலமாகும். இவ்வாறு தேய்ந்து வளரும் சந்திரனின் தோற்றங்களையே 'கலைகள்’ என அழைக்கிறார்கள்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது, கிரகணங்கள் ஏற்படுகின்றன.

பூமியைப் போன்றே சந்திரனுக்கும் ஈர்ப்புத் தன்மை உண்டு. ஆனால், இந்த ஈர்ப்புச்சக்தி பூமியைவிட குறைவாக ஆறில் ஒரு பங்கே உள்ளது. இதனால் பூமியில் 6 கிலோகிராம் எடையுள்ள பொருள் சந்திரனில் 1 கிலோ கிராம் எடை மட்டுமே இருக்கும். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாகவே கடல் கொந்தளிப்பும் பேரலைகளும் எழுகின்றன. பெளர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் கொந்தளிப்பு