பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சயரோகம்

அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அவ்விரு நாட்களிலும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தியோடு

நிலவிலிருந்து காணும் உலகம்

சூரியனின் ஈர்ப்பாற்றலும் இணைந்து கொள்வதேயாகும்.

சந்திரனைப் பற்றிய சிந்தனை மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வந்துள்ள போதிலும் அறிவியல்-ஆய்வுகள் முனைப்படைந்த பின்னரே அதன் உண்மைத் தோற்றமும் தன்மையும் தெரியவந்தன. இதன் முத்தாய்ப்பாக 1969ஆம் ஆண்டு மூன்று அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் அப்பெல்லோ 11 எனும் விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்று திரும்பினர். 1975இல் அப்பல்லோ-15 இல் சென்ற ஆய்வாளர்கள் அங்கிருந்தபோது ரோவர் எனும் ஊர்திமூலம் சந்திரனின் நிலப்பரப்பில் சிறிது தூரம் பயணம் செய்தனர். அப்போது மண்ணையும் கல்லையும் ஆய்வு செய்ய அங்கிருந்து மாதிரி எடுத்து வந்தனர். சந்திரனைப் பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.


சயரோகம் : ‘டூபர்குளோசிஸ்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்நோய் 'காசநோய், 'சயரோகம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இஃது தொற்று நோய்களிலேயே மிகக் கொடிய தொற்று நோயாகும். இது மைக்ரோ பாக்டீரியம் டுபர் குளோசிஸ் எனும் நச்சு நுண்கிருமிகளால் உண்டாகும் நோயாகும். இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்களும் பாதிக்கப்படுவதுண்டு.

காச நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இருமுவார்கள். அப்போது இந்நோய்க்கிருமிகள் காற்றில் பரவுகின்றன. காசநோயாளி காரி உமிழ்வதன் மூலம் இந்நோய் பரவுகின்றது. எனவே, காசநோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இருமும்பொழுது தங்கள் வாயையும் மூக்கையும் துணியால் போர்த்திக் கொள்ளவேண்டும்.நோயாளிகண்ட இடத்தில் எச்சிலை உமிழாது, ஒரு சிறு பாத்திரத்தில் துப்பி அதை நெருப்பிலிட்டு அழித்துவிட வேண்டும். இல்லையெனில் அவ்வெச்சிலை வெறுங்காலால் மிதிப்பவர்களும் காசநோய்க்கிருமி கலந்த காற்றைச் சுவாசிப்பவர்களும் எளிதாக இந் நோயால் பிடிக்கப்படுவார்கள். சயரோக நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளும் இந்நோயைப் பரப்புகின்றன. குறிப்பாக, இந்நோய் கண்ட பசுவின் பாலைக் குடிப்பவர் இந்நோயால் தொற்றப்படுகிறார்.

காசநோய்க்கிருமிகள் உடல் முழுவதையும் பாதிக்கும் தன்மை கொண்டவை என்றாலும் அதிகம் நுரையீரலையே பாதிக்கின்றன.

இந்நோய் கண்டவருக்கு இரவு நேரங்களில் காய்ச்சல் உண்டாகும். அடிக்கடி இருமல் வரும். நாட்பட்ட காச நோயாளியின் எச்சிலில் இரத்தமும் கலந்திருக்கும். நாளடைவில் உடல் மெலியும். இதனாலேயே இந்நோயை எலும்புருக்கி நோய் என்று அழைக்கிறார்கள்.