பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகம்

181

விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி

கைமுறையால் தோல் சுருக்கம் நீக்கல்

கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்

தோலுக்கு சாயமூட்டும் பீப்பாய்கள்

பகுதியில் நன்கு தடவுவர். பின்னர் அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும். அதன் பின், வேதிப்பொருட்கலவையோடு கூடிய சுண்ணாம்புக்கரைசலில் ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறத்தேயுள்ள மயிர்கள் நீக்கப்படுகின்றன. தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் முக்கி எடுப்பர். இப் போது மயிர் மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்.

தோலைப் பதனப்படுத்த மூன்று முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலவகை மரப் பட்டைகள். காய்களைத் தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு பதனிடப்படுகிறது. இது 'தாவரப் பதனப்படுத்துதல்’ முறையாகும். குரோமியம், அலுமினியம், இரும்பு முதலான உலோகப் பொருட்களடங்கிய வேதி உப்புக்களைக் கொண்டு பதனிடப்படும். இது தாதுப் பொருள் பதனிடும் முறையாகும். மீன் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளைக் கொண்டு பதனப்படுத்துவது எண்ணெய் பதனிடு முறையாகும்.

மேற்கண்ட முறைகள் நெடுநாளாக இருந்து வரும் முறைகளாகும். இன்று எந்திரங்களின் மூலமே பெரும்பாலும் தோல் பதனிடப்படுகிறது. இவ்வாறு பதனப்படுத்தும் தோல்களை எந்திரங்களே விரைவாக உலர்த்துகின்றன. தோலின் தேவையற்ற பகுதிகளை இயந்திரங்களே வெட்டி ஒழுங்குபடுத்துகின்றன. எந்திரங்கள் மூலமே பதப்படுத்தப்பட்டதோலின் சுருக்கங்கள் போக்கப்பட்டு, பளபளப்பாக மெருகூட்டப்படுகின்றன.

தோல் பதனிட்டுத் தொழிலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டைனா முதலான நாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவில் முழுக்கப் பதனிடப்பட்ட, ஓரளவே பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் கணிசமான அளவு அந்நியச் செலாவணி இந்தியாவுக்குக் கிடைக்கிறது.


நகம் : கை, கால் விரல்களின் பாதுகாப்புக் கேடயமாக அமைந்திருப்பவை நகங்களாகும். மனிதர்களுக்கு உள்ளது போன்ற நக அமைப்பே குரங்கினங்களுக்கும் உள்ளது. விரலின் மேற் பகுதியில் தோலின் அடியில் உள்ள உயிரணுக்களின் அடுக்கிலிருந்து கிளைத்து வரும் நகம் மிக மெதுவான வளர்ச்சியைக் கொண்டதாகும். நகம் நம் தோலின் ஒரு பகுதி. ஆனால், தோலைவிடக் கடினமானது. 'கெரடின்' (Kerotin) என்ற புரதப் பொருளால் ஆனது நகம். இது நம் விரல் நுனி எலும்பின் ஆரம்பத்தில் தொடங்குகிறது, நகத்தில் நாளங்களோ, நரம்புகளோ இல்லை. எனவேதான், நகத்தை வெட்டும்போது வலி தெரிவதில்லை.

நகம் வளர்வதற்கு இரும்புச் சத்து புரதச்