பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

நியான்

வில் இரத்தக் குழாய்களும் சிறுகுடலும் சுருங்கி விடுகிறது. இதனால், இரத்தநாள குடல் நோய்கள் தோன்றுகின்றன. புற்று நோய்க்கு நிக்கோட்டினும் ஒரு காரணமாகும். நிக்கோட்டின் அதிகமுள்ள புகையிலையை பயன்படுத்தினால் பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும்.

நிக்கோட்டின் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. எனவே, தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை ஒழிக்க புகையிலைச் சாற்றைத் தெளிக்கிறார்கள். ஒருவரது உயிரைப் போக்க 40 கிராம் நிக்கோட்டின் போதும். புகையிலையை வாயில் வைத்துக் சுவைக்கும்போது அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கும். அதிக அளவில் வேர்ப்பதும் உண்டு. கூடியவரை நிக்கோட்டின் மிகுந்துள்ள புகையிலை போன்ற பொருட்களை உடலளவில் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


நிணநீர்மண்டலம் : இது ஒருவகை ஊநீர் ஆகும். இது மஞ்சள் நிறம்போன்று தோற்றமளிக்கும். இது உப்புச் சுவை கொண்ட காரத் திரவமாகும். இது இரத்தத் தந்துகிகளிலுள்ள பிளாஸ்மாவிலிருந்து ஊறி வெளிப்படுகிறது.

நிணநீரில் குளோரிட்டைன் குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் உள்ளது. ஆக்சிஜனும் ஊட்டச் சத்துக்களும் நிறைய உள்ளன. இச்சத்துக்களை திசுக்கள் உறிஞ்சிக் கொண்டு தங்களிடமுள்ள அழுக்குகளை நிணநீரில் கலந்து விடுகின்றன. பின்னர் அவ்வழுக்குகளை நிணநீர் இரத்தத்தோடு கலந்து விடுகின்றன. இரத்தத்துக்குத் தேவைப்படும் ஊட்டச் சத்துக்களையும் இதுவே எடுத்துச் செல்கிறது. இவ்வாறு இந்நிணநீராகிய ஊனிர் உயிரணுக்களுக்கும் இரத்தத்துக்குமிடையே ஓர் இணைப்புப் பாலமாகவே விளங்குகிறதெனலாம்.

நிணநீரை உடலெங்கும் கொண்டு செல்ல நிணநீர் நாளங்கள் பயன்படுகின்றன. இந் நாளங்கள் இரத்த ஒட்டத்திற்கான தமனிகள், சிரைகள் போன்றிருக்கும். ஆழமான நாளங்கள் உடலின் உட்புறத்திலும் ஆழமற்ற நாளங்கள் தோலின் கீழ்ப்பகுதியிலும் அமைந்துள்ளன. இந்நாளங்கள் வால்வுகள் உடையவை. இதனால் நிணநீர் இதயம் நோக்கியே செல்ல முடியும். இதயமும் தசையும் சுருங்கி விரிவதால் நிணநீர் ஓட்டம் நடைபெறுகிறது.

நிணநீர்ச் சுரப்பிகள் ஒரளவுக்குக்கெட்டித் தன்மை கொண்டவையாகும். இவை மார்பு, வயிறு ஆகியன அமைந்துள்ள ஆழப்பகுதியிலும் தொடை, அக்குள் கழுத்து ஆகிய மேற்பகுதியிலும் அமைந்துள்ளன. இச்சுரப்பிகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன. நிணநீர் தந்துகிகளிலிருந்து எடுத்து வரும் கழிவுகள் தோல், நுரையீரல், சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நிணநீர்ச் சுரப்பிகள் நோய்க் கிருமிகளை எதிர்க்கவல்ல லிம்போசைட்டஸ் எனும் வெள்ளையணுக்களை உருவாக்கி நிணநீருடன் கலக்கின்றன. நிணநீர் ஓட்டம் தடைப்படின் வீக்கம் ஏற்படும். அப்போது பைலேரியல் பாரசைட் யானைக்கால் வியாதியைத் தோற்றுவிக்கும். -

நோய்க் கிருமிகள் குறிப்பிட்ட உடல் உறுப்பில் நுழையும்போது அந்த உறுப்புக்கு உண்டான நிணநீர் முடிச்சு அளவில் பெரிதாக வீங்கி நோயினை அறிய உதவுகிறது. காலில், புண் வந்தால் தொடையில் நெறி கட்டுவதும் கையில் புண் வந்தால் அக்குளில் நெறி கட்டுவதும் இவ்வாறு வீங்கிய நிணநீர் முடிச்சுகளே யாகும்.


நிமோனியா : இது ஒருவகை நச்சுக்காய்ச்சலாகும். நுரையீரல் அழற்சியால் உருவாகும் நோய். நுரையீரல் சிற்றறைகளில் நுண்ணுயிர் கிருமிகள் தங்கி அப்பகுதி பாதிக்கப்படும்போது இந்நோய் தோன்றுகிறது. அதற்கு நச்சு நுண்ணுயிரிகளால் உண்டாகும் அழற்சியே அடிப்படைக் காரணமாய் அமைகிறது.

நிமோனியா என்றும், நிமோனியா நச்சுக் காய்ச்சல் என்றும் இருவகைப்படும். இந்நோய் சாதாரணமாக நாற்பது முதல் ஐம்பது வயதுக் குட்பட்டவர்களையே அதிகம் பீடிக்கும். நியூமோக்காக்கஸ் எனும் நோய்க்கிருமிகளே இந்நோய்க்குக் காரணமாகும். குழந்தைகளுக்கும் வயதான முதியோர்களுக்கும் மூச்சுக்குழல் தொடர்பான நிமோனியா நோய் வரும், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற கிருமிகள் இந்நோயை எளிதாகத் தோற்றுவிக்கின்றன.

இந்நோய்க்கு காற்றோட்டம் குறைந்த இடங்களிலும் நெருக்கமான பகுதிகளிலும் வாழ்பவர்களே அதிகம் பலியாகிறார்கள். உடலில் இந்நோய் எதிர்ப்புச் சக்தி குறையம் போதும் இந்நோய் எளிதாக ஏற்படும்.

இந்நோய் திடீரென ஏற்படும். அப்போது கடுமையான காய்ச்சலும் மிகுந்த குளிரும்