பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீராவி எஞ்சின் பொறி

193

நீர்மூழ்கிக் கப்பலை முதன்முதலில் கண்டறிந்து வடிவமைத்தவர் கார்னிலியஸ் வான்டிரெபெல் எனும் நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். 1620ஆம் ஆண்டில் இவர் வடிவமைத்த முதல் நீர்முழ்கிக் கப்பல் தேம்ஸ் நதியில் சுமார் 5 மீட்டர் ஆழத்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் 1899இல் ஜான் ஹாலண்ட் எனும் அமெரிக்க அறிவியலறிஞர் இதில் பல மாற்றங்களைச் செய்து மாற்றித் திருத்தியமைத்தார். அது கிட்டத்தட்ட இன்றைய வடிவையொத்து அமைந்தது. காலப்போக்கில் மேலும் பல மாற்றங்களை ஏற்று இன்றைய அமைப்பைப் பெற்றுள்ளது.

உலக வல்லரசுகள் மட்டுமல்லாது இந்தியா போன்ற வளரும் நாடுகளும் நீர்முழ்கிக் கப்பல்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றன.

நீர்மூழ்கிக் கப்பல்களில் இடவசதிக் குறைவாக இருப்பதால் அதில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் அதிக நடமாட்டமில்லாதவர்களாக இருந்த இடத்தில் இருந்தவாறே பணியாற்ற வேண்டியவர்களாகிறார்கள். இதற்கு வீர தீர உணர்வும் மனவலிமையும் கொண்டவர்களே ஏற்றவர்கள். அத்தகையவர்கள் மட்டும் இப்பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.


நீர்வாழ் உயிரினங்கள் : தரைப் பகுதியில் மனிதன், விலங்குகள், பறவைகள் எனப் பல்வேறு உயிரினங்கள் வாழ்வது போன்றே, நீர்ப் பகுதிகளிலும் பல்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தரையின் மீது வாழும் உயிரினங்கள் உயிர்வாழ இன்றியமையாது தேவைப்படுவது பிராணவாயு எனும் ஆக்சிஜன். அதே போன்று நீரில் வாழும் உயிரினங்களுக்கும் பிராணவாயு தேவைப்படுகிறது. நீரில் கரைந்துள்ள பிராணவாயுவை செதில்கள் மூலம் கிரகித்து உயிர்வாழ்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய நீர்வாழ் உயிரினமாகிய திமிங்கிலமும் சிறிய உருவிலான நீர் நாய் மற்றும் சீல், போன்றவைகள் நுரையீரல் மூலம் சுவாசிப்பதால் அவை அடிக்கடி நீர்மட்டத்திற்கு வந்து செல்கின்றன.

நீர்வாழ் உயிரினங்களில் சிறியவை நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. திமிங்கிலம் போன்ற பெரிய விலங்குகள் சிறிய உயிர்களை உண்டு உயிர் வாழ்கின்றன. நீழ் வாழ் உயிரினங்கள் நீரில் நீந்தவும் பாறைபோன்றவற்றில் ஒட்டிக்கொண்டு வாழவும் ஏற்ற வகையில் இவற்றின் உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. ஆமை, முதலை போன்ற நீர் வாழ் உயிரினங்கள் தரைப்பகுதியில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் நீரை நோக்கிச் சென்று வாழ்கின்றன. மீன்களும் தவளைகளும் நீரிலேயே முட்டையிட்டு, குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்கின்றன. திமிங்கிலம், டால்ஃபின் கடற்பசு போன்றவை குட்டிகளை ஈன்று பாலூட்டி வளர்க்கின்றன.


நீராவி எஞ்சின் பொறி 'ஸ்டீம் எஞ்சின்' என்று வழங்கப்படும் நீராவி என்ஜின் நீராவியின் சக்தியைக் கொண்டு இயங்கும் பொறியாகும். இப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே போக்குவரத்து வழிகள் விரைந்து பெருகின; பொருள் உற்பத்தி மிகுந்தன; இதனால்

1769இல் வாட் அமைத்த நீராவிப் பொறி

வாணிகம் தழைத்தது. சுருங்கச் சொன்னால் தொழிற்புரட்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டியவற்றுள் தலையாய சிறப்பு இப்பொறிக்குரியதாகும்.

நிலக்கரியை எரிப்பதன் மூலம் அதனுள் அடங்கிக் கிடந்த சக்தி அனல் சக்தியாக வெளிப்படுகிறது. அதைக் கொண்டு நீரைக்-

13