பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரமானி

207

பாரஃபின் வாயு, திரவம் மற்றும் திடவடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் திரவநிலையில் உள்ள பாரஃபின் மட்டுமே பெட்ரோலிய மணத்துடன் இருக்கும். மற்றைய வகை பாரஃபின்களுக்கு மனமேதும் இல்லை. சாதாரணமாக பாரஃபின்கள் நீரில் கரைவதில்லை. திரவ மற்றும் வாயு பாரஃபின்கள் ஆல்கஹாலிலும் ஈதரிலும் எளிதாகக்கரைகின்றன.

இம் மெழுகைக் கொண்டு மெழுகுவத்திகள் செய்யப்படுகின்றன. தீக்குச்சிகள் தயாரிப்பதற்கும் மெழுகுத்தாள் செய்வதற்கும் பாரஃபின் மெழுகு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கலிக்கோ போன்ற சில வகைத் துணிகளுக்கும் பாரஃபின் மெழுகு மெருகுபோடப் பயன்படுத்தப்படுகிறது. மின் கருவிகளில் கம்பிச் சுருள்களில் மேல்பூச்சாகப் பூசப்படுகிறது. இசைத் தட்டு, கரித்தாள் (Carbon paper) அச்சு மை போன்றவற்றிலும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. நீர்க்காப்பு (Water proof)ப் பொருளாகவும் அமைந்து பயன்படுகிறது.

மருத்துவத் துறையில் மருந்துப் பொருளாகவும் பாரஃபின் பயன்படுகிறது.


பாரமானி : இது ஆங்கிலத்தில் பாரோமீட்டர் (Barometer) என்று அழைக்கப்படுகிறது. இது காற்றின் அழுத்த அளவைக் கணக்கிட்டுக் காட்டும் கருவியாகும்.

காற்றுக்கு எடை உண்டு என்பதை டாரி செல்லி எனும் இத்தாலிய விஞ்ஞானி 1648இல் கண்டறிந்தார். அதன் விளைவாக உருவாக்கப்பட்ட கருவியே பாரமானி.

எடையுள்ள காற்றானது பொருள்களை அழுத்துகிறது, இந்த அழுத்தத்தின் அளவை அளப்பதற்கான கருவியே பாரமானி. இதை அறிவதற்கான எளிய சோதனை முறை ஒன்று உண்டு. பாதரசம் நிரப்பப்பட்ட சிறு குழாயின் ஒரு முனையை கட்டை விரலால் மூடிக்கொண்டு அக்குழாயைத் தலைகீழாக பாதரசக் கிண்ணத்தில் வைக்க வேண்டும். அப்போது அக்குழாயில் உள்ள பாதரசம் சிறிதளவு இறங்கி பின் அப்படியே நின்றுவிடும். குழாயிலுள்ள பாதரசம் வெளியேறிவிடாது. வெளிக்காற்றின் அழுத்தமே குழாயிலுள்ள பாதரசத்தை முற்றாகக் கீழே இறங்காமல் தடுக்கிறது. மேற்பகுதியில் பாதரசம் இறங்கியதால் உண்டான காலியிடத்தின் உயரத்தை அல்லது பாதரசத்தின் உயரத்தைக் கொண்டு காற்றின் அழுத்தத்தைக் கணக்கிடுவர். இந்த உயரம் கால நிலைக்கும் உயரத்திற்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

பாரமானியில் பாதரசத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணம் மற்ற திரவங்களைவிட பாதரசம் அடர்த்தி மிக்கதாக இருப்பதேயாகும். சாதாரண வெப்பநிலையில் பாதரச ஆவி அழுத்தம் குறைவாக இருப்பது மற்றொரு காரணமாகும்.

வறட்சியான காற்றிற்கு அழுத்த சக்தி அதிகம் உண்டு. நீராவி நிறைந்த ஈரக்காற்றிற்கு அழுத்தம் குறைவாகும். எனவே, பாரமானியில் பாதரச ஏற்ற இறக்க அளவுகள் காற்றின் ஈரத்தன்மையையும் வறட்சித் தன்மையையும் அளவிட்டுக் காட்டிவிடும். பாதரசத்தின் உயரம் குறைவாக இருப்பின் அது ஈரக்காற்றின் விளைவாக ஏற்படப் போகும் மழைக்கான அறிகுறியை முன்னறிவிப்பதாகும். பாதரசத்தின் உயரம் திடீரெனக் குறைந்தால் அது புயலுக்கான அறிகுறியாகக் கொள்ளப்படும்.

கடல் மட்டத்திலிருந்து உயரச் செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் சீராகக் குறைந்து கொண்டே செல்லும். 12 சென்டிமீட்டருக்கு ஒரு சென்டிமீட்டர் வீதம் பாரமானியின் பாதரச உயரம் குறையும். இதன் மூலம் மலைகளின்

பாரமானியின் உட்புற அமைப்பு

உயரத்தை கண்டறிய முடியும். அதே போன்று பூமிக்குக் கீழே ஆழத்தில் செல்லும் போதும் இதே விகிதத்தில் பாரமானியின் பாதரச உயரம் அதிகமாகும். இதிலிருந்து சுரங்கத்தின் ஆழத்தை அளந்தறிய முடியும்.

விமானிகள் காற்றின் அழுத்தத்தையும் தாங்கள் பறக்கும் உயரத்தையும் கணக்கிட்டறிய