பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெனிசிலின்

227

உடலில் உண்டான கட்டிகள் பதினைந்து நாட்களுக்குள் சீழ்பிடித்து வேதனை தரும். இந்நிலையில் நோயாளி மரணமடைய நேர்கின்றது. இதனால் இந்நோயைக் 'கொள்ளை நோய்’ என்றே மக்கள் அழைக்கின்றனர்.

இந்நோயின் கொடுமை பதினான்காம் நூற்றாண்டில் உலகில் உச்சநிலை அடைந்தது. இந்நோய் முதலில் மத்திய ஆசியாவில் தொடங்கியது. அங்கிருந்து கருங்கடல் பகுதியை எட்டியது. அங்கிருந்து ஐரோப்பா வெங்கணுமிருந்த துறைமுகப்பகுதிகளை அடைந்தது. ஐந்து ஆண்டுகளுக்குள் ஐரோப்பா கண்டம் முழுமையும் இந்நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்டது.

அப்போது நோய் கண்டவர் முதலில் பீதியடைவது தவிர்க்க முடியாததாக இருந்தது. மற்றவர்க்குத் தொற்றாமலிருக்க நோயாளி உடனடியாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நோய் மற்றவர்க்கு ஏற்படாமல் தடுக்கவும் ஏற்பட்டால் பரவாமலிருக்கவும் எல்லாவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நோயாளி இல்லங்களிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டார். மற்றவர்களுடன் கலந்துறவாடாமல் முற்றாகத் தடுக்கப்பட்டார். உணவு முதலியன அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்புப் பணியாளர் மூலமே வழங்கப்பட்டன. பிளேக் நோய் கண்டவர் இறந்தவுடன் அவர் உடைகளோடு அவர் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களும் எரிக்கப்பட்டன.

மீண்டும் பிளேக் நோய் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தலைதூக்கி மீண்டும் வெறியாட்டம் ஆடியது. லியோன், ஃபிரான்ஸ் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தொகையில் பாதிப்பேர் இக் கொடிய நோய்க்குப் பலியாயினர். மிலானில் மட்டும் 85 ஆயிரம் பேர் மடிந்தனர். வெனிசியக் குடியரசில் ஐந்து இலட்சம் பேர் இறந்தனர்.

இன்று இந்நோய் உலகெங்கும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோய் தோன்றாமல் தடுக்க அனைத்துப் பாதுகாப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்காக எலிப் பெருக்கம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிளேக் நோய் பீடிக்காமல் இருக்க தடுப்பு ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம் மருந்தை ஊசி மூலம் உடலுள் செலுத்திக் கொண்டால் சுமார் ஓராண்டுக் காலம் இந் நோயால் பாதிப்பு ஏற்படாது.


பெனிசிலின் : ஆங்கில விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளெமிங் என்பவர் தம் சோதனைக் கூடத்தில் பணியாற்றிய போது சற்றும் எதிர்பாராமல் கண்டுபிடித்த அற்புத மருந்தே 'பென்சிலின்' ஆகும். ஒரு சமயம் அவர் லண்டன் மருத்துவமனை ஒன்றின் ஆய்வுக் கூடத்தில் மனிதர்களுக்கு நோயுண்டாக்கும் பாக்டிரியாக்கள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பாக்டிரியாக்களை வளர்ப்பதற்கென அங்கே வைக்கப்பட்டிருந்த சிறிய தட்டு ஒன்றில் நீலங்கலந்த பச்சை நிறப் பூஞ்சக்காளான் படிந்திருப்பதைக் கண்ணுற்றார். அப்பூஞ்சக்காளானைச் சுற்றிலும் இருந்த பாக்டீரியாக்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது அவர் கவனத்தை ஈர்த்தது. அப்பூஞ்சக்காளான் பகுதியை முனைப்புடன் ஆராய்ந்தார். பாக்டீரியாக்களின்

பெரிதாக்கப்பட்ட பென்சிலின் பூஞ்சைக் காளான்

அழிவுக்குப் பூஞ்சக் காளானிலிருந்த பொருளே காரணம் எனக் கண்டறிந்தார். அப்பொருளை "பெனிசீலியம்’ என அழைத்தார். பூஞ்சக் காளானில் உள்ள பெனிசீலியப் பொருளிலிருந்து சுரக்கும் சுரப்புப் பொருளே பெனிசிலின் ஆகும். பெனிசிலின் மருந்து நோயுண்டாக்கும் பாக்டீரியாக் கிருமிகளை அழிக்குமே தவிர உயிரணுக்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுத்துவதில்லை. இதுவே பெனிசிலின் தனித் தன்மையாகக் கருதப்படுகிறது.